என் மலர்
நீங்கள் தேடியது "மது விற்ற 3 பேர் கைது"
தேனி:
பெரியகுளம் அருகே தெய்வேந்திரபுரம் பகுதியில் போலீசார்ரோந்துசென்றனர்.
அப்போது அங்கு மது விற்ற தங்கபாண்டி என்பவரை கைது செய்து 45 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கடமலைக்குண்டு போலீசார் மூலக்கடை பகுதியில் ரோந்து சென்றபோது மது விற்ற சதாசெல்வம் (வயது48), மலைச்சாமி (57) ஆகியோைர கைது செய்து அவர்களிடம் இருந்து 11 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
வேடசந்தூர்:
மிளாடி நபியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் வேடசந்தூர் மற்றும் கூம்பூர் பகுதியில் மதுபானங்கள் விற்கப்படு வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
விட்டல்நா யக்கன்பட்டி யில் மதுபானம் விற்ற சேடப்ப ட்டியைச் சேர்ந்த வெண்டி முத்து (வயது 35), பெருமாள் கோவில்ப ட்டியைச் சேர்ந்த அழகர்சாமி (50), கூம்பூர் குடகனாற்று பாலம் அருகே மது விற்ற கிரி யப்ப நாயக்க னூரைச் சேர்ந்த அமுத வேல் (35) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களி டமிருந்த மது பாட்டி ல்களை யும், பறிமுதல் செய்தனர்.






