என் மலர்
நீங்கள் தேடியது "இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம்"
- கல்வி வளர்ச்சிக்காக உண்மையில் உழைத்து கொண்டிருப்பவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்
- மடிக்கணினிகள் கொடுப்பது கல்வி வளர்ச்சிக்காக.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடி, இலவச மிதிவண்டிகளை மாணவர்களுக்கு வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 'தேர்தலையொட்டிதான் மிதிவண்டிகள், மடிக்கணினிகள் கொடுக்க அரசு முன்வந்துள்ளது' என்ற எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு பதிலளித்தார். இதுதொடர்பாக பேசிய அவர்,
"அவருக்குதான் எப்போதுமே பயம். அவர் இனி வரவே முடியாது என்பதை அவரே முடிவு செய்துவிட்டார். தற்போது பாஜகவின் அடிமையாகிவிட்டார். அவர் எது வேண்டுமானாலும் கூறுவார். ஆனால் கல்வி வளர்ச்சிக்காக உண்மையில் உழைத்து கொண்டிருப்பவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். மடிக்கணினிகள் கொடுப்பது கல்வி வளர்ச்சிக்காக.
படிக்கின்ற மாணவர்கள் இந்த காலக்கட்டத்திலேயே அவர்களின் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட திட்டங்கள். அதை யார் வேண்டுமானாலும் குறை கூறட்டும். அதும் அவர் சொல்வது குறித்து எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. மக்கள் அவரை புறக்கணித்து விட்டனர். கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு முதலமைச்சர் செய்துள்ள சாதனைகளை மக்கள் அறிவார்கள். அதனால் அவரது பேச்சு எப்போதும் எடுபடாது." என தெரிவித்தார்.
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
- தி.மு.க. அரசு அனைத்திற்கும் மத்திய அரசு தான் காரணம் என பழி சுமத்தி வருகிறது.
நாகர்கோவில்:
குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண் ணாவின் 114-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நாகர்கோவிலில் நடந்தது. கிழக்கு பகுதி செயலாளர் ஜெயகோபால் தலைமை தாங்கினார். கவுன்சிலர் அக்சயா கண்ணன் வரவேற்றார். கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ராஜாராம், தெற்கு பகுதி செயலா ளர் முருகேஷ்வரன், மாவட்ட அண்ணா தொழிற் சங்க செயலாளர் சுகுமாரன், கவுன்சிலர் அனிலா சுகுமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
நாகர்கோவிலில் பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வந்தது, மாநக ராட்சியாக தரம் உயர்த்தி யது அ.தி.மு.க. ஆட்சியில் தான். நாகர்கோவில் மாநக ராட்சி பகுதியில் பல ஆண் டுகளுக்கு முன்பாக கட்டப் பட்ட பழமையான வீடுகள் மழையின் காரணமாக சேதமடைந்துள்ளது. இந்த வீடுகளை மீண்டும் கட்டுவ தற்கு கட்டிட வரைபட அனுமதிகோரி விண்ணப் பிக்கும் பொதுமக்களுக்கு கட்டிட வரைபட அனுமதி வழங்காமல் மாநகராட்சி நிர்வாகம் மறுத்து வருகிறது. இதனால் பழைய வீடுகளை புதுப்பிக்க விரும்பும் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள் ளார்கள்.
ஆட்சியின் குறையை வெளியே தெரியாமல் மறைக்க தி.மு.க. அரசு அனைத்திற்கும் மத்திய அரசு தான் காரணம் என பழி சுமத்தி வருகிறது. தாலிக்கு தங்கம், மகளிருக்கு ஸ்கூட்டர், இலவச மடிக்க ணினி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் பச் சைமால், அனைத்துலகஎம். ஜி.ஆர். மன்ற இணைச்செய லாளர் வேலாயுதம், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், தலை மைக்கழக பேச்சாளர் முரு கானந்தம், எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர் கிருஷ்ணதாஸ், இளைஞர் அணிஇணைச்செயலாளர் சிவசெல்வராஜன் ஆகி யோர் வாழ்த்தி பேசினர்.
இதில் இணைச்செயலா ளர் சாந்தினி பகவதியப்பன், ஒன்றிய செயலாளர்கள் ஜெஸிம், மகராஜன் பிள்ளை மற்றும் விவசாய அணி மாவட்ட தலைவர் வடிவை மாதவன், ஆரல்வாய்மொழி பேரூர் செயலாளர் முத்துக் குமார், தோவாளை வடக்கு ஒன்றிய செயலாளர் பொன்.சுந்தர்நாத், மாநகராட்சி கவுன்சிலர் ஸ்ரீலிஜா, மாவட்ட பஞ்சாயத்து கவுன் சிலர் நீலபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






