என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் கலெக்டரிடம் மனு"

    • ஓம் சக்தி நகர் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
    • இதுவரையில் எங்களுக்கு மேட்டூர் காவிரி குடிநீர் வசதியே செய்து கொடுக்கப்படவில்லை.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா பாகல்பட்டி கிராமம் அருகே அமைந்துள்ளது ஓம் சக்தி நகர். இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் இப்பகுதியில் சுமார் 650 வீடுகள் வாங்கி குடியிருந்து வருகிறோம். எங்கள் குடியிருப்பு பகுதிக்கு இதுவரை மேட்டூர் காவிரி குடிநீர் வசதி என்பது இல்லாததால் நாங்கள் பஞ்சாயத்து ஆழ்துளை கிணறு தண்ணீரைதான் குடிப்பதற்கும், எல்லா வசதிக்கும் பயன்படுத்தி வருகிறோம். எங்கள் பகுதி சுற்றியுள்ள கிராமமான மாரமங்க லத்துப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, பூமிநா யக்கன்பட்டி, சர்க்கார் கொல்லப்பட்டி, மஜ்ரா கொல்லப்பட்டி, செங்கா னூர், தோளூர் ஆகிய பகுதிக ளுக்கெல்லாம் மேட்டூர் காவிரி குடிநீர் வசதிசெய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆனால் எங்கள் குடியிருப்பு பகுதிக்கு மட்டும் மேட்டூர் காவிரி குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட வில்லை. இது குறித்து பலமுறை கிராம சபைகூட்டத்திலும், ஊராட்சி மன்ற தலைவரையும், துணை தலைவர் ஊராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்து கடிதம் கொடுத்தோம். இதுவரையில் எங்களுக்கு மேட்டூர் காவிரி குடிநீர் வசதியே செய்து கொடுக்கப்படவில்லை.

    மேலும் எங்கள் பகுதியில் சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள், வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு இந்த சாலையில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே குடிநீர் வசதி, சாலை வசதி ஆகியவற்றை விரைவாக மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    • குளத்தை தனிநபருக்கு ஏலம் விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
    • அசம்பாவிதங்கள் எங்கள் பகுதிகளில் நடைபெறாமல் இருப்பதற்கு எங்கள் ஊர் குளத்தை எங்களுக்கு மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே அடியனூத்து ஊராட்சிக்கு உட்பட்ட என்.பெருமாள் கோவில்பட்டியில் உள்ள மீரா ராவுத்தர் குளத்தை தனிநபருக்கு ஏலம் விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

    அந்த மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது,

    திண்டுக்கல் அருகே அடியனூத்து கிராமத்திற்கு உட்பட்ட என்.பெருமாள் கோவில் பட்டியில் மீராராவுத்தர் குளம் உள்ளது. சிறுமலையிலிருந்து பருவ மழை பெய்து சூசையார்புரம், நல்லாம்பட்டி, என்.பெருமாள் கோவில்பட்டி ஆகிய பகுதிகளின் வழியாக மீரா ராவுத்தர் குளத்திற்கு நீர் வரும்போது ஊர் பொதுமக்கள் சேர்ந்து மீன் வாங்கி குளத்தில் விடுவோம்.

    பின் நீர் வற்றும் போது எங்கள் ஊரைச் சுற்றியுள்ள மக்களுக்கு அறிவிப்பு விட்டு மீன்பிடி திருவிழா காலம் காலமாக நடத்தி வந்து கொண்டிருக்கிறோம். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீன்பிடி திருவிழா நடந்தது.

    அதேபோல் இந்த ஆண்டும் மீன்பிடி திருவிழா நடத்த உள்ளோம். இதற்கிடையில் மேற்கு மரியநாதபுரத்தை சேர்ந்த ஒருவர் எங்கள் ஊர் குளத்தை ஏலம் எடுத்ததாக கூறி குளத்தின் கரையை சுத்தம் செய்து அங்கேயே தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார். ஊர் பொதுமக்கள் அவரிடம் சென்று கேட்டபோது தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டுகிறார்.

    மேலும் குளம் ஏலம் சம்பந்தமாக மேற்கு மரியநாதபுரத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வாலிபர் ராகேஷ் குமார் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.ஆகவே இதுபோன்ற அசம்பாவிதங்கள் எங்கள் பகுதிகளில் நடைபெறாமல் இருப்பதற்கு எங்கள் ஊர் குளத்தை எங்களுக்கு மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

    ×