என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்.பி.வேலுமணி பேச்சு"

    • அ.தி.மு.க. 31 ஆண்டுகள் ஆட்சி செய்து இருக்கிறது.
    • 4 ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்து பல திட்டங்களை செயல்படுத்தினார்.

    கோவை,

    அ.தி.மு.க. வீரவரலாற்றின் பொன்வி ழா எழுச்சி மாநாடு வருகிற 20-ந் தேதி மதுரையில் நடைபெறுகிறது.

    இந்த மாநாட்டில் பங்கேற்பது தொடர்பான கோவை ஒருங்கிணைந்த மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவை இதய தெய்வம் மாளிகையில் நடந்தது.

    எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், செ.தாமோதரன், ஏ.கே.செல்வராஜ், கே.ஆர்.ஜெயராம், சூலூர் கந்தசாமி, அமுல்கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரையில் வருகிற 20-ந் தேதி நடைபெறும் பொன்விழா எழுச்சி மாநாட்டில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேச உள்ளார். அந்த கூட்டத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் குடும்பம், குடும்பமாக பங்கேற்க வேண்டும்.

    அ.தி.மு.க. தொடங்க ப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. அ.தி.மு.க. 31 ஆண்டுகள் ஆட்சி செய்து இருக்கிறது. பல திட்டங்க ளை எம்.ஜி.ஆர்., ஜெயலலி தா ஆகியோர் கொண்டு வந்து உள்ளனர். 4 ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்து பல திட்டங்களை செயல்படுத்தினார்.

    தங்களுக்கு ஓட்டு போட்டவர்கள் மட்டுமல்லாமல் ஓட்டு போடாதவர்களுக்கும் பல திட்டங்களை கொண்டு வருவோம் என்று ஆட்சி பொறுப்பேற்றதும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2 அரை ஆண்டுகள் ஆகிறது. ஆனால் தமிழகத்தில் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை.

    இதனால் தமிழக மக்கள் எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக்க முடிவு செய்துவிட்டனர். எப்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் என்று எதிர்பார்த்து உள்ளனர். வருகிற 20-ந் தேதி மதுரையில் நடைபெ றும் மாநாடு தமிழகத்தில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும்.

    முதல்-அமைச்சராவது உறுதி

    நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். அத்துடன் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரும்.

    இதில் அ.தி.மு.க. 200 தொகுதிக்கும் மேல் வெற்றி பெற்று மீண்டும் முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்பது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, முன்னாள் எம்.பி.தியாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் கஸ்தூரி வாசு, எட்டிமடை சண்முகம், வால்பாறை அமீது, பகுதி செயலாளர்கள் ராஜ்குமார், காட்டூர் செல்வராஜ், செல்வகுமார் மற்றும் சிங்கை முத்து, வக்கீல் ராஜேந்திரன், பொருளாளர் பார்த்திபன், கவுன்சிலர் பிரபாகரன்,சிங்கை பாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒவ்வொரு பூத்களுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து மக்களை சந்தித்து பணியாற்ற வேண்டும்.
    • சொந்த வேலைகளை முடித்துவிட்டு ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் கட்சி பணியாற்றினால் போதும்.

    கோவை,

    கோவை மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் புறநகர் வடக்கு மாவட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.

    கூட்டத்துக்கு புறநகர் வடக்கு மாவட்ட செயலா ளர் பி.ஆர்.ஜி. அருண்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி னார். கோவை மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் முகிலன் முன்னிலை வகி த்தார். இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலு மணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

    ஒவ்வொரு பூத்களுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து மக்களை சந்தித்து பணியாற்ற வேண்டும். பாசறையில் கண்டிப்பாக 25 பேரை 18 வயது நிறைந்த புதிய உறுப்பினர்களை நியமிக்க வேண்டும்.

    அப்போதுதான் அவர்கள் அதிக புதிய இளம் உறுப்பினர்களை கட்சிக்கு கொண்டு வருவார்கள். கட்சியில் உள்ள மூத்த வர்கள், இளம் உறுப்பின ர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பூத் கமிட்டி தொடர்பாக சொந்த வேலைகளை முடித்துவிட்டு ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் கட்சி பணியாற்றினால் போதும். ஞாயிற்றுக்கிழமை முழு நேரமாக பணியாற்ற லாம்.

    இப்போது உள்ள சூழ்நிலையில் தி.மு.க.வை மக்கள் முழுமையாக எதிர்க்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி முதல்-அமை ச்சராக வரவேண்டும் என அனைவரும் நினைக்கி றார்கள். இந்த வாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். விசுவாசமாக பணியாற்ற வேண்டும். சிறு, சிறு மனஸ்தாபங்கள் இருந்தால் அதை ஒதுக்கி வைத்துவிட்டு இணைந்து கட்சி பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு பூத்துக்கும் கண்டிப்பாக 59 பேர் கொண்ட பொறுப்பாளர்க ளை நியமிக்க வேண்டும். அந்த வகையில் கோவை வடக்கு மாவட்டத்தில் 1067 பூத் கமிட்டிகள் உள்ளன. ஒரு பூத் கமிட்டிக்கு 59 பேர் வீதம் 62 ஆயிரத்து 950 வேரை நியமிக்கலாம். அப்படி நியமித்து பணியா ற்றும் போது நாம் எளிதாக வெற்றியடையலாம்.

    தமிழகத்தில் தற்போது சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டது. கவர்னர் மாளிகை யிலேயே பெட்ரோல் கொண்டு வீசப்பட்டுள்ளது. தமிழக மக்கள் மீது முதல் -அமைச்சர் மு.க.ஸ்டா லினுக்கு அக்கறை இல்லை. தமிழக மக்கள் நலனில் அக்கறை கொண்டு துணி ச்சலான முடிவு எடுக்கக் கூடியவர் எடப்பாடி பழனிசாமி. பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என துணிச்சலுடன் அறிவித்தார் அதனை தாங்க முடியாமல் மு.க. ஸ்டாலின் மறைமுக கூட்டணி என புலம்பி வருகிறார்.

    காவிரி பிரச்சினையில் பாஜக கூட்டணி இருந்த போது 37 அ.தி.முக. எம்.பி.க்கள் 23 நாட்கள் பாராளுமன்றத்தை முடக்கி போராட்டம் நடத்தி னார்கள். ஆனால் இப்போது தி.மு.க.வுக்கு 38 எம்.பி.க்கள் இருந்தும் அவர்கள் நாற்காலியை தேய்த்துக் கொண்டிரு க்கிறார்கள். இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவ அமை ப்பை சேர்ந்தவர்கள் எட ப்பாடி பழனிசாமி சந்தித்து சரியான முடிவை எடுத்து உள்ளீர்கள் என பாராட்டி வருகிறார்கள்.

    தற்போது தமிழகத்தில் துணிச்சலாக முடிவு எடுக்கக் கூடிய தலைவராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். எனவே அ.தி.மு.க.வை தேடித்தான் கூட்டணி வைப்பவர்கள் வருவார்கள். எனவே நாம் மக்களை சந்தித்து கட்சி பணியாற்றி அ.தி.மு.க. வெற்றி பெற அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். இதில் எம்.எல்.ஏ.க்கள் தாமோதரன், ஏ.கே. செல்வராஜ், சூலூர் கந்தசாமி, அவைத்தலைவர் வெங்கடாசலம் உள்பட கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து புறநகர் தெற்கு மாவட்ட பொது கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. 

    • தமிழகத்தை காக்க விரைவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் நடக்கும்.
    • தி.மு.க.அமைச்சர்கள் ரூ.50 ஆயிரம் கோடி கொள்ளையடித்து உள்ளனர். தற்போது நடப்பது நாடக ஆட்சி.

    கோவை

    அண்ணா பிறந்தநாளை யொட்டி கோவை தொண்டா முத்தூர் சட்டமன்ற தொகுதி, குனியமுத்தூர் பகுதி அ.தி.மு.க. சார்பில் குனியமுத்தூரில் பொதுக்கூட்டம் நடந்தது.

    இதற்கு முன்னாள் அமைச்சரும், புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார்.பின்னர் கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    அண்ணாவின் புகழை பற்றி பேசுவதற்கு

    அ.தி.மு.க.வுக்கு மட்டுமே தகுதி உள்ளது. அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டரும் முதல்-அமைச்சர் ஆகலாம். 1967-ம் ஆண்டு தி.மு.க.ஆட்சிக்கு வர எம்.ஜி.ஆர். தான் காரணம்.

    2016-ம் ஆண்டில் ஜெயலலிதா இறந்தவுடன் குறுக்குவழியில் ஆட்சியை பிடித்து விடலாம் என்று மு.க.ஸ்டாலின் நினைத்தார். ஆனால் அதற்கு நான் முட்டுக்கட்டையாக இருந்ததால் எனது வீட்டில் ரெய்டு நடத்துகிறார்கள்.

    தி.மு.க.அமைச்சர்கள் ரூ.50 ஆயிரம் கோடி கொள்ளையடித்து உள்ளனர். தற்போது நடப்பது நாடக ஆட்சி. அதில் மு.க.ஸ்டாலின் நடிக்கிறார். கோவை மாவட்டத்தில் 50 ஆண்டு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். வெள்ளலூர் பஸ் நிலையத்தை இடமாற்றம் செய்யக்கூடாது.

    கோவையில் தற்போது எங்கு பார்த்தாலும் சாலைகள் படுமோசமாக உள்ளன. எனவே சாலைகளை சீரமைக்காவிட்டால் மாநகராட்சி முன்பு போராட்டம் நடத்தப்படும். தி.மு.க.வின் பொய் பிரசாரம் மக்களிடம் செல்லுபடியாகாது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்வோம். அதைத்தொடர்ந்து நடைபெற உள்ள சட்டமன்றதேர்தலிலும் வெல்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

    பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் நடிகை விந்தியா பேசியதாவது:- அமைச்சர் வீட்டில் ரெய்டு என்ற பெயரில் தி.மு.க. கபடி ஆடுகிறது. கோவை அ.தி.மு.க.வின் கோட்டை. இதில் யாரும் போட முடியாது ஓட்டை.

    போக்சோ வழக்குகள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தற்போது பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இது விடியல் அரசு இல்லை. விளம்பர அரசு. இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதியில் கூறியதை தி.மு.க. அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. எம்.ஜி.ஆருக்கும், அண்ணாவுக்கும் இடையே சகோதரத்துவ நட்பு இருந்தது.

    எம்.ஜி.ஆர்., அண்ணாவின் கொள்கை களை பின்பற்றினார். அ.தி.மு.க. ஆட்சியில் பெண்கள் மதிக்க ப்பட்டனர். எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. நிரந்தர பொதுச்செயலாளராக வருவார்.

    தமிழகத்தை காக்க விரைவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் நடக்கும்.

    தற்போது தேர்தல் வைத்தால் கூட அ.தி.மு.க. நிச்சயம் வெல்லும். இவ்வாறு அவர் பேசினார்.

    ×