என் மலர்
நீங்கள் தேடியது "தந்தை பலி"
- நடிகர் சாக்கோ, தாய் உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்தனர்.
- காரை சாக்கோவின் மேலாளர் ஓட்டிச்சென்றதாக கூறப்படுகிறது.
பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ. இவர் தமிழில் 'பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இவர் மீது நடிகை ஒருவர் தன்னிடம் தவறாக நடந்துக்கொண்டதாக புகார் அளித்து இருந்தார். இதனை தொடர்ந்து, கொச்சியில் உள்ள ஓட்டலில் போதைப்பொருள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை தேடி போலீசார் இரவில் அதிரடியாக சென்று சோதனை நடத்தினர். அப்போது ஷைன் டாம் சாக்கோ தங்கியிருந்த ஓட்டலில் இருந்து தப்பி ஓடியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே நிகழ்ந்த கார் விபத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் இருந்து பெங்களூருவுக்கு மருத்துவ பரிசோதனைக்காக காரில் சென்றபோது லாரி மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் நடிகர் சாக்கோவின் தந்தை சி.பி.சாக்கோ பலியானார். நடிகர் சாக்கோ, தாய் உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்தனர்.
காரை சாக்கோவின் மேலாளர் ஓட்டிச்சென்றதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மகன் கண் எதிரே பரிதாபம்
- போலீசார் விசாரணை
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே உள்ள புத்தகரம் ஊராட்சி முத்தாகவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கன் (வயது 54). அதே பகுதியில் டெய்லராக உள்ளார்.
இவரது மகன் குமரவேல் (35). சிங்கப்பூரில் வேலை பார்த்த இவர் தற்போது சொந்த ஊரில் வசித்து வருகிறார்.
இவர்களது உறவினர் சுந்தரம்பள்ளி அருகே உள்ள வேலவெள்ளி கிராமத்தில் இறந்துள்ளார்.
இதற்காக ரங்கன், குமரவேல் சென்றனர். அங்கிருந்து இருவரும் பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டனர். ரங்கன் பின்னால் அமர்ந்திருந்தார்.
காக்கங்கரை ஏரி பகுதியில் திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது அதே வழியாக வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிளை முந்தி சென்றபோது மோட்டார் சைக்கிள் கண்ணாடி மீது உராய்ந்து நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்ந்திருந்த ரங்கன் லாரி பின் சக்கரத்தில் விழுந்தார்
இதில் ரங்கன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். குமரவேல் வலது புறமாக விழுந்து பலத்த காயமடைந்தார். கந்திலி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மகனை கல்லூரியில் படிக்க வைக்க சென்றபோது பரிதாபமாக தந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- விபத்து குறித்து பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
ஆரணி அடுத்த பாலவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் (40). இவரது மகன் தனசேகரன். இருவரும் இருசக்கர வாகனத்தில் பொன்னேரி எல்.என்.ஜி. கல்லூரிக்கு சென்று தனசேகரனை கல்லூரியில் சேர்த்துவிட்டு வீட்டிற்கு திரும்பி வரும்போது பொன்னேரி அடுத்த ஏலியம்பேடு சாலை குன்னமஞ்சேரி அருகில் வரும்போது ஏலியம்பேட்டில் இருந்து பொன்னேரி வந்து கொண்டிருந்த டிராக்டர் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் பாஸ்கர் தலையில் அடிபட்டு கீழே விழுந்தார். லேசான காயத்துடன் தனசேகரன் தப்பினார். அருகில் உள்ளவர்கள் உதவியுடன் 108 ஆம்புலன்சில் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவர்கள் பரிசோதித்தபோது வரும் வழியில் பாஸ்கர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர். மகனை கல்லூரியில் படிக்க வைக்க சென்றபோது பரிதாபமாக தந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






