என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர் வீழ்ச்சி"

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
    • பெரியார் நீர் வீழ்ச்சியில் இருந்து வெளியேறும் நீர் செந்நிறத்தில் உள்ளது.

    தென்னிந்திய கடலின் மேற்பரப்பில் வணிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த கனமழையால் கல்வராயன் மலை பெரியார் நீர் வீழ்ச்சியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க நேற்று தடை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில், பெரியார் நீர் வீழ்ச்சியில் இருந்து வெளியேறும் நீர் செந்நிறத்தில் உள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை 1 வாரம் தடை விதித்துள்ளது.

    • கல்வராயன்மலை அடிவாரத்தில் முட்டல் ஏரி, ஆனைவாரி நீர் வீழ்ச்சி உள்ளது.
    • வனத்துறையின் சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் இந்த நீர் வீழ்ச்சி செயல்படுகிறது.

    ஆத்தூர்:

    ஆத்தூர் அருகே கல்வராயன் மலை அடிவாரத்தில் முட்டல் ஏரி, ஆனைவாரி நீர் வீழ்ச்சி உள்ளது. வனத்து றையின் சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் இந்த நீர் வீழ்ச்சி செயல்படுகிறது.

    வெள்ளப்பெருக்கால் மூடல்

    கடந்த மாதம் 25-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கல்வராயன் மலை பகுதியில் பெய்த கன மழையால் ஆனைவாரி நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 31-ந் தேதி அதிக அளவில் தண்ணீர் வந்ததால் சுற்றுலா மையத்தை வனத்துறையினர் மூடினர். இந்த நிலையில் தண்ணீர் வரத்து குறைந்ததால் இன்று முதல் ஆணை வாரி நீர் வீழ்ச்சி , முட்டல் ஏரி சுற்றுலா மையம் திறக்கப்படும் அதிகாரிகள் அறிவித்தனர் . அதன் படி இன்று காலை முதல் ஆணைவாரி நீர் வீழ்ச்சி முட்டல் ஏரி சுற்றுலாமையம் திறக்கப்பட்டது. பல நாட்களுக்கு பிறகு நீர் வீழ்ச்சி திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் காலை முதலே அதிக அளவில் குவிந்தனர்.

    ×