என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்குச்சாவடி பட்டியல்"

    • கலெக்டர் ஆலோசனை
    • அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்குச்சாவடி மறு சீரமைப்பு இறுதி பட்டியல் குறித்து அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் உடனான‌ கலந்தாலோசனைக் கூட்டம் நடந்தது.

    கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    கடந்த 1.9.22-ந் தேதி வரை வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது.இப்பட்டியல் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து தாலுகா அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களிலும் வெளியிடப்பட்டது.

    இந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியலின் மீது அரசியல் கட்சிகள், பொதுமக்கள், தன்னா ர்வ லர்கள், குடியிருப்போர் நல சங்க உறுப்பினர்கள், எவருக்கேனும் ஆட்சேபனை அல்லது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனில் தங்களது எழுத்துப்பூர்வமான கடிதங்களை வாக்காளர் பதிவு அலுவலர் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது மாவட்ட தேர்தல் அலுவலருக்கு 7 நாட்களுக்குள் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.

    அதன் அடிப்படையில் பெறப்பட்ட மனுக்களின் மீது விசாரணை மேற்கொண்டு, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு வாக்குச்சாவடி பட்டியலில் மாற்றங்கள் செய்து வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மானாமதுரை கிராமம், பாகம் எண் 181 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி ஆனது அதை பள்ளி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிட அறைக்கும் மாற்றம் செய்யப்படுகிறது.

    சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பனப்பாக்கம் கிராமம், பாகம் எண்கள் 246, 247 மற்றும் 248 ஏற்கனவே அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி என இருந்ததை அரசினர் மாதிரி மேல்நிலைப்பள்ளி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி பாகம் எண் 248-ல் பிரிவுகளின் (தெரு) பெயர்கள் ஒரே மாதிரியாக இடம் பெற்றிருந்ததை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

    ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆற்காடு நகரம் பாகம் எண்கள் 149, 150, 151 அரசு மாதிரி பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி கட்டிடம் இடிக்கப்பட்டதால் பாகம் எண் 149 அருகில் உள்ள ஜானகிராமன் பூங்கா அங்கன்வாடி மையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    பாகம் எண்கள் 150 மற்றும் 151 ஆகியவை அருகில் உள்ள சி.அப்துல் ஹக்கீம் அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கே.வேளூர் கிராமம், பாகம் எண் 234 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சா வடியில் 2 தெருக்கள் மட்டும் பொதுமக்களின் கோரிக்கை அடிப்படையில் அதே பள்ளி வளாகத்தில் உள்ள பாகம் எண் 233- க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ஆற்காடு சட்டமன்றத் தொகுதி ஆற்காடு நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பாகம் எண்கள் 141, 142, 143, 144, 145, 146 ஆகியவற்றின் பெயர்கள் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்பதை சி.அப்துல் அக்கீம் அரசினர் ஆண்கள் மேல்நி லைப்பள்ளி என திருத்தம் செய்யப்ப ட்டுள்ளது.

    திருத்தங்கள் செய்யப்பட்ட பின்னர் இறுதியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 1122 வாக்குச்சாவடிகள் இடம் பெற்றுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் மறு சீரமைக்கப்பட்ட வாக்குச்சா வடி விவரங்கள் குறித்து ஆட்சேபனைகள் ஏதும் உள்ளதா? என அரசியல் கட்சி பிரமுகர்களிடம் கேட்டதற்கு, அவர்கள் ஆட்சேபனை ஏதும் தெரிவிக்காமல் பட்டியலை அங்கீகரித்தனர். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், தேர்தல் தாசில்தார் ஜெயக்குமார், அனைத்து தாசில்தார்கள், அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு சுருக்க முறை திருத்தம் -2023ன் முன் திருத்தப்பணிகள் 4-8-2022 முதல் 31-10-2022 வரை நடைபெற உள்ளது.
    • வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான வினீத் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

    திருப்பூர் :

    இந்திய தேர்தல் ஆணையம் 1-1-2023-ந்தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் -2023ன் முன் திருத்தப்பணிகள் 4-8-2022 முதல் 31-10-2022 வரை நடைபெற உள்ளது. அதன் ஒரு பணியான வாக்குச்சாவடிகளை தணிக்கை செய்து பகுப்பாய்வு செய்தல் மற்றும் பிரிவுகளை ஏற்படுத்துதல் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமை தேர்தல் அலுவலர், முதன்ைம செயலர் வழிகாட்டுதலின் படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 1500 வாக்காளர்களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் அமைப்பதற்காக உத்தேகிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை உள்ளடக்கிய வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் இன்று மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான வினீத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

    புதிதாக ஏற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளையும் சேர்த்து 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மொத்த வாக்குச்சாவடிகள் விவரம் வருமாறு:- தாராபுரம் (தனி)-298, காங்கயம் -295, அவினாசி (தனி)-313, திருப்பூர் (வடக்கு)- 374,திருப்பூர் தெற்கு-242, பல்லடம் -410, உடுமலைபேட்டை-294, மடத்துக்குளம்-287 என மொத்தம் 2513 வாக்குச்சாவடிகள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான கோரிக்கைகள் மற்றும் ஆட்பேசனைகள் குறித்து 29. 8. 22 முதல் 6.9. 22 வரை சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் தெரிவிக்கலாம் . 7-9- 22 முதல் 14.9. 22 வரையிலான ஒரு தினத்தில், திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்களால், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கான கூட்டம் நடத்தப்படும்.

    மேற்படி கூட்டத்தில் வரப்பெற்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர்களால் அனுப்பப்படும் முன்மொழிவுகளை இறுதி செய்ய மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் கூட்டம் நடத்தி சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மூலமாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்து ஒப்புதல் பெறப்படும் என திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் எஸ். வினீத் தெரிவித்துள்ளார்.

    ×