என் மலர்
உள்ளூர் செய்திகள்

வரைவு வாக்குச்சாவடி பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள முன்னிலையில் கலெக்டர் வினீத் வெளியிட்ட காட்சி.
திருப்பூர் மாவட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல் கலெக்டர் வெளியிட்டார்
- சிறப்பு சுருக்க முறை திருத்தம் -2023ன் முன் திருத்தப்பணிகள் 4-8-2022 முதல் 31-10-2022 வரை நடைபெற உள்ளது.
- வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான வினீத் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
திருப்பூர் :
இந்திய தேர்தல் ஆணையம் 1-1-2023-ந்தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் -2023ன் முன் திருத்தப்பணிகள் 4-8-2022 முதல் 31-10-2022 வரை நடைபெற உள்ளது. அதன் ஒரு பணியான வாக்குச்சாவடிகளை தணிக்கை செய்து பகுப்பாய்வு செய்தல் மற்றும் பிரிவுகளை ஏற்படுத்துதல் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமை தேர்தல் அலுவலர், முதன்ைம செயலர் வழிகாட்டுதலின் படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 1500 வாக்காளர்களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் அமைப்பதற்காக உத்தேகிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை உள்ளடக்கிய வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் இன்று மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான வினீத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
புதிதாக ஏற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளையும் சேர்த்து 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மொத்த வாக்குச்சாவடிகள் விவரம் வருமாறு:- தாராபுரம் (தனி)-298, காங்கயம் -295, அவினாசி (தனி)-313, திருப்பூர் (வடக்கு)- 374,திருப்பூர் தெற்கு-242, பல்லடம் -410, உடுமலைபேட்டை-294, மடத்துக்குளம்-287 என மொத்தம் 2513 வாக்குச்சாவடிகள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான கோரிக்கைகள் மற்றும் ஆட்பேசனைகள் குறித்து 29. 8. 22 முதல் 6.9. 22 வரை சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் தெரிவிக்கலாம் . 7-9- 22 முதல் 14.9. 22 வரையிலான ஒரு தினத்தில், திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்களால், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கான கூட்டம் நடத்தப்படும்.
மேற்படி கூட்டத்தில் வரப்பெற்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர்களால் அனுப்பப்படும் முன்மொழிவுகளை இறுதி செய்ய மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் கூட்டம் நடத்தி சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மூலமாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்து ஒப்புதல் பெறப்படும் என திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் எஸ். வினீத் தெரிவித்துள்ளார்.






