என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்தில் தொழிலாளி சாவு"

    • உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று திரும்பிய போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    சேத்துப்பட்டு:

    தேசூர் அருகே சீயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண் டியன் (வயது 33), கூலி தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளார். மேலும் தற்போது மகேஸ்வரி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இந்த நிலையில் பாண்டியன் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது செஞ்சியில் இருந்து தேசூர் நோக்கி சென்ற அரசு பஸ் இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தேசூர் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கண்ணிமைக்கும் நேரத்தில் செங்கல் லோடு ஏற்றிவந்த லாரி எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதி அதன் மீது ஏறி நின்றது.
    • போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    பழனி:

    பழனியை அடுத்துள்ள நெய்காரப்பட்டியில் இருந்து செங்கல் லோடு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி கொழுமம் நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரி அய்யம்பாளையம் பிரிவு அருகே சென்ற போது எதிரே பழனியை நோக்கி தென்னை மட்டைகள் ஏற்றிக்கொண்டு மற்றொரு லாரி வந்து கொண்டிருந்தது.

    அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் செங்கல் லோடு ஏற்றிவந்த லாரி எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதி அதன் மீது ஏறி நின்றது. இதில் இடுபாடுகளுக்குள் சிக்கி சித்தரேவை சேர்ந்த பெரியசாமி (35) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைப்பார்த்ததும் அப்பகுதி மக்கள் பழனி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த 10 பேரை மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் கொழுமம் சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • மோட்டார் சைக்கிளில் வந்த நபரும் பெரியசாமியும் நேருக்கு நேர் மோதியது.
    • இதில் பெரியசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தீத்தாரப்பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி பெரியசாமி (வயது 32). இவர் நேற்று காலை பாலக்கோட்டிலிருந்து மாரண்டஅள்ளி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    காட்டு மாரியம்மன் கோவில் அருகே உள்ள திருப்பத்தில் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த நபரும் பெரியசாமியும் நேருக்கு நேர் மோதியதில் பெரியசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    தகவலறிந்த பாலக்கோடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெரியசாமியின் உடலை கைப்பற்றி பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×