என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்ஜெய்சங்கர்"

    • இந்தியா-சீனா இடையிலான எல்லை பிரச்சனை நீண்ட காலமாகவே உள்ளது.
    • இதுகுறித்து பாராளுமன்றத்தின் மக்களவையில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பேசினார்.

    புதுடெல்லி:

    இந்தியா -சீனா இடையிலான எல்லை பிரச்சனை நீண்ட காலமாகவே உள்ளது. எல்லைகள் இதுவரை துல்லியமாக வரையறை செய்யப்படவில்லை. எல்லை கட்டுப்பாடு கோடு நிர்ணயிக்கப்பட்டு இரு நாட்டு ராணுவமும் அவரவர் பகுதியில் ரோந்து செல்கின்றன.

    கல்வான் பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டில் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இரு நாடுகளின் உறவு முன் எப்போதும் இல்லாத வகையில் பாதிக்கப்பட்டது. இருநாட்டு ராணுவத்தினரும், நேருக்கு நேர் மோதும் வகையில் எல்லையில் படைகளை குவித்தனர்.

    கடந்த அக்டோர்பர் மாதம் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் உடன்பாடு ஏற்பட்டது. இருநாட்டு ராணுவத்தினரும், எந்தெந்தப் பகுதியில் ரோந்து செல்வது என ஒப்புக் கொள்ளப்பட்டது.

    இந்நிலையில், இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனை குறித்து பாராளுமன்றத்தின் மக்களவையில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பேசியதாவது:

    தூதரக ரீதியில் நடந்து வந்த தொடர் பேச்சுவார்த்தை காரணமாக இந்தியா-சீனா இடையிலான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

    எல்லைப் பிரச்சனைக்கு நேர்மையான, சுமூகமான மற்றும் இருதரப்பும் சுமூகமாக ஏற்றுக்கொள்ளும் முடிவை எடுப்பதற்கு தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட இந்தியா உறுதிபூண்டுள்ளது. மீதமுள்ள சிக்கல்களை தீர்க்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    எல்லையில் சீனப்படைகள் குவிக்கப்பட்ட காலத்தில் கடினமான சூழ்நிலையிலும் இந்திய ஆயுதப்படையினர் உடனடியாகவும், விரைவாகவும் பணியாற்றினர் என தெரிவித்தார்.

    • லாகூரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் இம்ரான்கான் பங்கேற்றார்.
    • அப்போது பேசிய அவர், வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் வீடியோவை வெளியிட்டு பாராட்டினார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே சமயத்தில்தான் சுதந்திரம் பெற்றது. இருந்தபோதிலும் இந்தியா தனது மக்கள் நலனுக்கான உறுதியான நிலைப்பாட்டுடன் தனக்கெனெ ஒரு சுதந்திரமான வெளியுறவுக்கொள்கையை வகுக்க முடிகிறது. ஆனால், ஷாபாஸ் ஷெரீப் அரசாங்கத்தால் இது முடியவில்லை.

    ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கக்கூடாது என்று இந்தியாவுக்கு அமெரிக்கா உத்தரவிட்டது. அமெரிக்காவின் மிக முக்கிய கூட்டாளி இந்தியாதான், பாகிஸ்தான் கிடையாது. ஆனாலும், ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கக்கூடாது என்று அமெரிக்கா கூறியதற்கு இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் என்ன சொன்னார் என்று பாருங்கள் என பேசிய இம்ரான்கான், இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கச்சா எண்ணெய் விவகாரம் தொடர்பாக பேசும் வீடியோவை ஒளிபரப்பி காட்டினார்.

    அந்த வீடியோவில் கச்சா எண்ணெய் வாங்குவது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜெய்சங்கர், நீங்கள் யார்? ரஷியாவிடமிருந்து ஐரோப்பிய நாடுகள் எரிவாயு வாங்குகின்றன. மக்களின் தேவைக்காக நாங்கள் வாங்குகிறோம். நாங்கள் சுதந்திரமான நாடு என கூறிய காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

    இதைத்தொடர்ந்து பேசிய இம்ரான்கான், ரஷியாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்க பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், அமெரிக்காவின் நெருக்கடிக்கு பயந்து வாங்கவில்லை. இங்கு, எரிபொருள் விலை ராக்கெட் வீதியில் உயர்ந்து வருகிறது. மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே தள்ளப்படுகின்றனர். இந்த அடிமைத்தனத்தை நான் எதிர்க்கின்றேன் என தெரிவித்தார்.

    ×