search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் வீடியோவை காட்டி இந்தியாவை புகழ்ந்த இம்ரான்கான்
    X

    இம்ரான்கான்

    வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் வீடியோவை காட்டி இந்தியாவை புகழ்ந்த இம்ரான்கான்

    • லாகூரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் இம்ரான்கான் பங்கேற்றார்.
    • அப்போது பேசிய அவர், வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் வீடியோவை வெளியிட்டு பாராட்டினார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே சமயத்தில்தான் சுதந்திரம் பெற்றது. இருந்தபோதிலும் இந்தியா தனது மக்கள் நலனுக்கான உறுதியான நிலைப்பாட்டுடன் தனக்கெனெ ஒரு சுதந்திரமான வெளியுறவுக்கொள்கையை வகுக்க முடிகிறது. ஆனால், ஷாபாஸ் ஷெரீப் அரசாங்கத்தால் இது முடியவில்லை.

    ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கக்கூடாது என்று இந்தியாவுக்கு அமெரிக்கா உத்தரவிட்டது. அமெரிக்காவின் மிக முக்கிய கூட்டாளி இந்தியாதான், பாகிஸ்தான் கிடையாது. ஆனாலும், ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கக்கூடாது என்று அமெரிக்கா கூறியதற்கு இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் என்ன சொன்னார் என்று பாருங்கள் என பேசிய இம்ரான்கான், இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கச்சா எண்ணெய் விவகாரம் தொடர்பாக பேசும் வீடியோவை ஒளிபரப்பி காட்டினார்.

    அந்த வீடியோவில் கச்சா எண்ணெய் வாங்குவது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜெய்சங்கர், நீங்கள் யார்? ரஷியாவிடமிருந்து ஐரோப்பிய நாடுகள் எரிவாயு வாங்குகின்றன. மக்களின் தேவைக்காக நாங்கள் வாங்குகிறோம். நாங்கள் சுதந்திரமான நாடு என கூறிய காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

    இதைத்தொடர்ந்து பேசிய இம்ரான்கான், ரஷியாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்க பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், அமெரிக்காவின் நெருக்கடிக்கு பயந்து வாங்கவில்லை. இங்கு, எரிபொருள் விலை ராக்கெட் வீதியில் உயர்ந்து வருகிறது. மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே தள்ளப்படுகின்றனர். இந்த அடிமைத்தனத்தை நான் எதிர்க்கின்றேன் என தெரிவித்தார்.

    Next Story
    ×