என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவசண்டி யாகம்"

    • சென்னிமலை டவுன் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது.
    • மங்கள மஹா நவசண்டியாக யாகம் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படுகிறது.

    சென்னிமலை:

    சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகத்தின் கீழ் சென்னிமலை டவுன் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தினசரி பூஜைகளும், பவுர்ணமி மற்றும் வாரத்தில் முக்கிய நாள்களில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன.

    கோவிலில் உலக மக்கள் நன்மைக்காக வேண்டியும், தொழில், விவசாயம் செழிக்கவும் ஸ்ரீ மாரியம்மன் மற்றும் ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ மகா சரஸ்வதி ஆகி முப்பெரும் தேவிகளுக்கு மங்கள மஹா நவசண்டியாக யாகம் வரும் ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி காலை 8 மணிக்கு கோ பூஜை, விநாகயர் வழிபாடு, கணபதி ேஹாமத்துடன் பூஜைகள் தொடங்கப்படுகிறது.

    அன்று மாலை புண்யாஹவாசனம், பஞ்சகவ்ய பூஜை, சப்தசதி வழிபாடு, 64 யோகினி மற்றும் 64 பைரவர் பலி பூஜை, தீபாராதனை ஆகியன நடக்கிறது.

    11-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை விக்னேஸ்வர பூஜை, பஞ்சகவ்ய பூஜை, தேவி கலசத்திற்கு நவாவரண பூஜை, அக்னி காரியம் 13 அத்தியா ஹோமம், நவசண்டியாகம், சண்டியாக ஸங்கல்பம் பஞ்சகவ்யம், சுமங்கலிபூஜை, கன்னியா பூஜை, வடுக பூஜை, மங்கல மஹா பூர்ணாஹுதி, கலச அபிஷேகம் பூஜை தீபாராதனை நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கால பைரவ விழாக்குழு அன்பர்கள் செய்து வருகின்றனர்.

    • வடுக பூஜை, கலச புறப்பாடு, ஸ்ரீ சக்கரம்,. கலசாபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை செய்யப்பட்டது.
    • விழாவில், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவிலில் உலக நன்மைக்காக மகா நவசண்டி யாகம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில், 28-வது ஆண்டு மகா நவசண்டி யாகம், கடந்த வெள்ளிக்கிழமை முதல் 3 நாட்கள் நடைபெற்றது. விழா நிகழ்ச்சிகள், கணபதி ஹோமம், பூர்ணாஹுதி ஆகிய நிகழ்ச்சிகளுடன் தொடங்கி, அங்குரார்ப்பணம், வாஸ்து ஹோமம் மற்றும் மகாதீபாராதனையும், சனிக்கிழமை அன்று முதற்கால மகா நவசண்டியாகம், லட்சுமி ஹோமம், ருத்ர ஹோமம் மற்றும் இரவு இரண்டாம் கால மகா சண்டி யாகமும் நடைபெற்றது.

    விழாவின் நிறைவு நாளான நேற்று, கலசபூஜை, ருத்ர ஹோமம், துர்கா ஹோமம் லட்சுமி ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு பின்னர், மூன்றாம் கால மகா நவ சண்டி யாகம் நடைபெற்றது.

    தொடர்ந்து, வடுக பூஜை, கலச புறப்பாடு, ஸ்ரீ சக்கரம்,. கலசாபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை செய்யப்பட்டது. மேலும், விழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • சென்னிமலை மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக மங்கள சண்டியாக விழா வருகிற 4-ந் தேதி தொடங்குகிறது.
    • இக்கோவிலில் தினசரி பூஜைகளும், பவுர்ணமி மற்றும் வாரத்தில் முக்கிய நாள்களில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன.

    சென்னிமலை:

    சென்னிமலை டவுன், காங்கேயம் மெயின் ரோட்டில் உள்ள மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக மங்கள சண்டியாக விழா வருகிற 4-ந் தேதி தொடங்குகிறது.

    சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகத்தின் கீழ் சென்னிமலை டவுன் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தினசரி பூஜைகளும், பவுர்ணமி மற்றும் வாரத்தில் முக்கிய நாள்களில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன.

    கோவிலில் உலக மக்கள் நன்மைக்காக வேண்டியும், தொழில், விவசாயம் செழிக்கவும் மாரியம்மன் மற்றும் மகாலட்சுமி, மகா சரஸ்வதி ஆகி முப்பெரும் தேவிகளுக்கு மங்கள மஹா நவசண்டியாக யாகம் ஆகஸ்ட் 4-ந் தேதி காலை 8 மணிக்கு கோ பூஜை, விநாகயர் வழிபாடு, கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்குகிறது.

    4-ந் தேதி வியாழன் அன்று மாலை புண்யாஹவாசனம், பஞ்சகவ்ய பூஜை, சப்தசதி வழிபாடு, 64 யோகினி மற்றும் 64 பைரவர் பலி பூஜை, தீபாராதனை ஆகியன நடக்கிறது.

    மறுநாள் 5-ந் தேதி வெள்ளிக்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை, பஞ்சகவ்ய பூஜை, தேவி கலசத்திற்கு நவாவரண பூஜை, அக்னி காரியம் 13 அத்தியா ஹோமம், நவசண்டியாகம், சண்டியாக ஸங்கல்பம் பஞ்சகவ்யம், சுமங்கலிபூஜை, கன்னியா பூஜை, மாங்கல மஹா பூர்ணாஹுதி, கலச அபிஷேகம் பூஜை தீபாராதனை நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கால பைரவ விழாக்குழு அன்பர்கள் செய்து வருகின்றனர்.

    ×