என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உலக நன்மைக்காக மங்கள மகா நவசண்டி யாகம்
    X

    உலக நன்மைக்காக மங்கள மகா நவசண்டி யாகம்

    • சென்னிமலை மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக மங்கள சண்டியாக விழா வருகிற 4-ந் தேதி தொடங்குகிறது.
    • இக்கோவிலில் தினசரி பூஜைகளும், பவுர்ணமி மற்றும் வாரத்தில் முக்கிய நாள்களில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன.

    சென்னிமலை:

    சென்னிமலை டவுன், காங்கேயம் மெயின் ரோட்டில் உள்ள மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக மங்கள சண்டியாக விழா வருகிற 4-ந் தேதி தொடங்குகிறது.

    சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகத்தின் கீழ் சென்னிமலை டவுன் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தினசரி பூஜைகளும், பவுர்ணமி மற்றும் வாரத்தில் முக்கிய நாள்களில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன.

    கோவிலில் உலக மக்கள் நன்மைக்காக வேண்டியும், தொழில், விவசாயம் செழிக்கவும் மாரியம்மன் மற்றும் மகாலட்சுமி, மகா சரஸ்வதி ஆகி முப்பெரும் தேவிகளுக்கு மங்கள மஹா நவசண்டியாக யாகம் ஆகஸ்ட் 4-ந் தேதி காலை 8 மணிக்கு கோ பூஜை, விநாகயர் வழிபாடு, கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்குகிறது.

    4-ந் தேதி வியாழன் அன்று மாலை புண்யாஹவாசனம், பஞ்சகவ்ய பூஜை, சப்தசதி வழிபாடு, 64 யோகினி மற்றும் 64 பைரவர் பலி பூஜை, தீபாராதனை ஆகியன நடக்கிறது.

    மறுநாள் 5-ந் தேதி வெள்ளிக்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை, பஞ்சகவ்ய பூஜை, தேவி கலசத்திற்கு நவாவரண பூஜை, அக்னி காரியம் 13 அத்தியா ஹோமம், நவசண்டியாகம், சண்டியாக ஸங்கல்பம் பஞ்சகவ்யம், சுமங்கலிபூஜை, கன்னியா பூஜை, மாங்கல மஹா பூர்ணாஹுதி, கலச அபிஷேகம் பூஜை தீபாராதனை நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கால பைரவ விழாக்குழு அன்பர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×