என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீட்டு கொடுத்த போலீசார்"

    • பஸ்சில் வந்து பார்த்தபோது செல்போன் மாயமாகி இருந்தது.
    • கேமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் போலீஸ் நிலைய எல்லையில் ஆற்றுக்கு தெற்கு பகுதியில் சுமார் 250 சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்த ப்படக்கூ டிய பணி நடைபெற்று வருகிறது.

    கிட்டத்தட்ட 80 சதவீத பணிகள் முடிவடையக் கூடிய நிலையில் உள்ளது.

    தற்போது 128 கேமிராக்கள் சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள காவல் துறை சி.சி.டி.வி. கேமிராக்கள் கண்காணிப்பு அறையில் பதிவுகள் பார்க்க க்கூடிய நிலையில் உள்ளது.

    இந்நிலையில் நேற்று சத்தியமங்கலத்தில் தனியார் பள்ளியில் பயிற்சி பள்ளி ஆசிரியை யாக பணியாற்றும் காவலிப்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெயஸ்ரீ என்ற ஆசிரியை சத்தியமங்க லம் பஸ் நிலையத்தில் 6-ம் எண் பஸ்சில் தனது ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை தவற விட்டார்.

    பின்னர் மீண்டும் அந்த பஸ்சில் வந்து பார்த்தபோது செல்போன் மாயமாகி இருந்தது.

    இதையடுத்து அவர் உடனடியாக சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் உள்ள புறநகர் போலீஸ் நிலைய த்தில் புகார் செய்தார். அங்கு சி.சி.டிவி. கேமிராக்கள் உதவியுடன் கட்டுப்பாட்டு அறையில் உள்ள கேமிரா பதிவுகளை போலீ சார் ஆய்வு செய்தனர்.

    அப்போது ஆசிரியை தவறவிட்ட செல்போனை மூதாட்டி ஒருவர் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றது தெரிய வந்தது.

    அந்த மூதாட்டி தனது வீட்டிற்கு 2 கிலோ மீட்டர் நடந்து சென்றார். அந்த 2 கிலோ மீட்டரும் 25 கேமிரா க்களில் அந்த காட்சிகள் பதிவாகி இருந்தது.

    பின்னர் போலீசார் அந்த மூதாட்டி வீட்டுக்கு சென்று செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த செல்போனை ஆசிரியை ஜெயஸ்ரீயிடம் ஒப்படைத்தனர். அவர் போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.

    • பூ வாங்கி சென்றபோது தங்க நகையை தவறவிட்டனர்
    • துப்புரவு பணியாளர் ஒருவர் நகையை எடுத்துச் சென்றது தெரியவந்தது

    பண்ருட்டி, கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கரும்பூரை சேர்ந்தவர் சத்தியவாணி (வயது45)இவர். இவரது குடும்பத்துடன் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக காரில் பண்ருட்டி வந்தார். பண்ருட்டி 4 முனை சந்திப்பு காந்தி பூங்கா அருகில் காரை நிறுத்திவிட்டு பூ வாங்கிக்கொண்டு சென்றார். அப்போது அவரது தங்கநகையை தவறவிட்டார்.

    சிறிது தூரம் சென்றபின் நகை தவறி விட்டது தெரியவந்தது.  இதுபற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர், போலீசார் சுரேஷ் , அன்பரசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

    கண்காணிப்பு கேமராவில் காரில் வந்தவர் தவறவிட்ட தங்க நகையை  முதியவர் ஒருவர் எடுத்துச் செல்லும் காட்சி தெரிய வந்தது. உடனடியாக துரிதமாக செயல்பட்ட போலீசார் கண்காணிப்பு கேமராவில் சிக்கிய நபரை தேட ஆரம்பித்தனர் . பண்ருட்டி நகராட்சியின் நெல்லிக்குப்பம் நகராட்சி ஆகிய இடங்களில் விசாரித்தனர். 

    விசாரணையில் நெல்லிக்குப்பம் நகராட்சி சேர்ந்த துப்புரவு பணியாளர் நகையை எடுத்துச் சென்றது தெரியவந்தது. உடனடியாக அவரை விசாரித்தனர். விசாரணையில் கீழே கிடந்ததால் எடுத்துச் சென்றதாக கூறிய அவர், அந்த நகையை போலீசாரிடம் கொடுத்தார். போலீசாரின் துரித நடவடிக்கையால் நகை மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீசாரின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டினர். 

    ×