என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீன அதிபர் ஜின்பிங்"

    • நான் ஒரு போதும் நமது விவசாயிகளுக்கு பாதிப்பு உருவாக சம்மதிக்க மாட்டேன்.
    • சீனாவுடன் பில்லியன் கணக்கான டாலர் மதிப்பிலான பண்ணைப்பொருட்கள் ஒப்பந்தத்தை ஜோ பைடன் மேற்கொள்ளவில்லை.

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பிறகு இந்தியா, சீனா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்தார். இதையடுத்து அமெரிக்காவில் சோயாபீன்சை கொள்முதல் செய்வதை சீனா நிறுத்தியது. அமெரிக்காவை பொறுத்தவரை சீனாவின் சோயாபீன்சுகளை வாங்குவதில் முக்கிய பங்கினை வகிக்கிறது.

    சீனா சோயாபீன்ஸ் ஏற்றுமதியை நிறுத்தியதால் அமெரிக்காவில் சோயாபீன்ஸ் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் டிரம்ப் இந்த மாத இறுதியில் தென்கொரியாவில் நடைபெற உள்ள ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க இருக்கிறார். இது தொடர்பாக டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

    நம் நாட்டில் சோயாபீன்ஸ் வாங்காததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பேச்சுவார்த்தைக்காக மட்டுமே சீனா சோயாபீன்ஸ் வாங்குவதில்லை. நாம் வரிகள் மூலம் நிறைய சம்பாதித்து விட்டோம். அதில் கொஞ்சம் எடுத்து விவசாயிகளுக்கு உதவுவோம். நான் ஒரு போதும் நமது விவசாயிகளுக்கு பாதிப்பு உருவாக சம்மதிக்க மாட்டேன். சீனாவுடன் பில்லியன் கணக்கான டாலர் மதிப்பிலான பண்ணைப்பொருட்கள் ஒப்பந்தத்தை ஜோ பைடன் மேற்கொள்ளவில்லை. நான் நமது தேசபக்தர்களையும், விவசாயிகளையும் நேசிக்கிறேன்.

    சீன அதிபர் ஜி ஜின் பிங்கை அடுத்த 4 வாரங்களில் நான் சந்திக்கவுள்ளேன். இந்த சந்திப்பில் சோயாபீன்ஸ் தான் முக்கிய விவாதப் பொருளாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள சீனா செல்லும் பிரதமர் மோடி, நாளை அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசுகிறார். #NarendraModi #XiJinping
    புதுடெல்லி:

    ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் அமைப்பில் சீனா, ரஷியா, கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்று உள்ளன. இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்த ஆண்டுதான் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக சேர்ந்தன.

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 18-வது மாநாடு சீனாவின் ஷான்டோங் மாகாணத்தில் உள்ள கிங்தாவோ நகரில் நாளை (சனிக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. சீன அதிபர் ஜின்பிங் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவது, இந்த பிராந்தியத்தில் அமைதியை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.

    மாநாட்டில் கலந்து கொள்ளும் தலைவர்களுக்கு நாளை மாலை ஜின்பிங் விருந்து அளிக்கிறார். இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மேலும் நாளை அவர் ஜின்பிங்கை தனியாக சந்தித்து பேசுகிறார்.

    சீனாவில் உள்ள வூஹன் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் மோடியும், ஜின்பிங்கும் சாதாரண முறையில் சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து பேசினார்கள். அதன்பிறகு இப்போது அவர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள்.

    மாநாட்டில் கலந்து கொள்ள வரும் பிற நாடுகளின் தலைவர்களை மோடி சந்தித்து பேச இருக்கிறார்.

    மேற்கண்ட தகவல்களை வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

    ஆனால் பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் உசைனை பிரதமர் மோடி சந்தித்து பேசுவாரா? என்பது பற்றி தகவல் எதுவும் வெளியாகவில்லை.   #NarendraModi #XiJinping #Tamilnews 
    ×