என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழகத்தில் ஊழல்"

    தமிழகத்தில் நடைபெறும் ஊழல்களுக்கு பாரதிய ஜனதா துணை நிற்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார். #TTVDhinakaran #BJP
    திருவண்ணாமலை:

    திருக்கோவிலூர் வந்த டி.டி.வி.தினகரன் திருவண்ணாமலை ஓட்டலில் தங்கினார். அவர், இன்று காலை நிருபர்களிடம் கூறியதாவது:-

    லோக் ஆயுக்தா மசோதா சட்டசபையில் நிறைவேறியது வரவேற்கத்தக்கது. இந்த அமைப்பில் யாருடைய தலையீடும் இருக்க கூடாது. சத்துணவு முட்டை ஊழல், மறைந்த முதல்-அமைச்சர் இருக்கும் போதே அவருடைய கவனத்திற்கு செல்லாமல் 10 ஆண்டுகளாக ஊழல் செய்து வந்துள்ளனர்.

    நாடாளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 25 தொகுதியிலும், சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதியிலும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வரும்போது எடப்பாடி பழனிசாமி ஆட்சி கலையும்.


    பா.ஜனதா தலைவர் அமித்ஷா தமிழகத்தில் தான் அதிக ஊழல் நடப்பதாக கூறுகிறார். தமிழகத்தில் ஆட்சியை தாங்கி பிடிப்பதே பா.ஜனதா தான். எனவே, ஊழலுக்கு துணை நின்று அமித்ஷாவே குற்றம் சாட்டுவது வேடிக்கையாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #BJP
    ×