என் மலர்
நீங்கள் தேடியது "நீலகிரியில் கன மழை"
- உதகையில் இருந்த வெளி மாநிலங்களுக்கு செல்லக்கூடிய கூடலூர் சாலை இரவு நேரத்தில் மூடப்படுகிறது.
- போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு அபாயம் உள்ளதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.
அபாயகரமான பாறைகள் அகற்றும் வரை கனரக வாகனங்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இந்த சாலையில் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அரசுப் பேருந்துகள் பகல் நேரங்களில் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
உதகையில் இருந்த வெளி மாநிலங்களுக்கு செல்லக்கூடிய கூடலூர் சாலை இரவு நேரத்தில் மூடப்படுவதாக கூறப்பட்டு்ளது.
மேலும், மேலும், ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் உதகையில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் நாளை மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையும், கோவை, நீலகிரியில் சில இடங்களில் பலத்த மழையும் பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. #RegionalMeteorologicalCentre #Rain
சென்னை:
தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப் பிரதேசங்களில் மழை பெய்து வருகிறது. இதேபோல் மாநிலத்தின் மற்ற இடங்களிலும் சென்னையிலும் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வடக்கு மற்றும் மத்திய வங்ககடல் பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 3 செ.மீ மழையும், சின்னகல்லார், ஏற்காடு, நடுவட்டம் (நீலகிரி) ஆகிய இடங்களில் 2 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
சேலம், ஆத்தூர், தேவலா (நீலகிரி), பண்ருட்டி, ஓசூரில் 1 செ.மீ மழை பெய்துள்ளது.
வடமேற்கு வங்ககடலில் ஒடிசா கடற்கரை பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் கடலோர ஆந்திரா, தெலுங்கானா, ராயலசீமா, ஒடிசா பகுதியில் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #RegionalMeteorologicalCentre #Rain
தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப் பிரதேசங்களில் மழை பெய்து வருகிறது. இதேபோல் மாநிலத்தின் மற்ற இடங்களிலும் சென்னையிலும் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது.
அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும், கோவை, நீலகிரியில் சில இடங்களில் பலத்த மழையும் பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வடக்கு மற்றும் மத்திய வங்ககடல் பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 3 செ.மீ மழையும், சின்னகல்லார், ஏற்காடு, நடுவட்டம் (நீலகிரி) ஆகிய இடங்களில் 2 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
சேலம், ஆத்தூர், தேவலா (நீலகிரி), பண்ருட்டி, ஓசூரில் 1 செ.மீ மழை பெய்துள்ளது.
வடமேற்கு வங்ககடலில் ஒடிசா கடற்கரை பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் கடலோர ஆந்திரா, தெலுங்கானா, ராயலசீமா, ஒடிசா பகுதியில் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #RegionalMeteorologicalCentre #Rain






