என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூத்த பத்திரிக்கையாளர்"

    • சிறந்த இதழியலாளருக்கான கலைஞர் எழுதுகோல் விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
    • 2023-ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் சிறந்த இதழியலாளருக்கான விருது.

    முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி நினைவாக ஆண்டு தோறும் கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி, தமிழ் இதழியல் துறை மூலம் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றிய சிறந்த இதழியலாளர்க்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 2023-ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் சிறந்த இதழியலாளருக்கான கலைஞர் எழுதுகோல் விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.

    அதன்படி, கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி, பெண்மையைப் போற்றும் வகையில், 2023-ஆம் ஆண்டின் சிறந்த பெண் இதழியலாளருக்காக பிரபல நியூஸ் சேனலின் செய்தி ஆசிரியர் சுகிதா சாரங்கராஜ்-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'கலைஞர் எழுதுகோல்' விருதினை வழங்கி கவுரவித்தார்.

    தொடர்ந்து 'நக்கீரன்' கோபாலுக்கும் முதலமைச்சர் 'கலைஞர் எழுதுகோல்'விருது வழங்கி கவுரவித்தார்.

    பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டு ஓராண்டையொட்டை, பல்வேறு பெயர்களில் செயல்படும் இந்து பயங்கரவாத அமைப்புகளை அரசு தடை செய்ய வேண்டுமென எழுத்தாளர்கள் கவர்னரிடம் மனு அளித்தனர். #GauriLankesh
    பெங்களூரு:

    மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டு நேற்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைந்தது. அவருடைய நினைவு நாளையொட்டி, கவுரி லங்கேஷ் அறக்கட்டளை சார்பில் பெங்களூரு மவுரியா சர்க்கிளில் இருந்து கவர்னர் மாளிகைக்கு ஊர்வலம் நடத்தப்பட்டது.

    இந்த ஊர்வலத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். பின்னர், அந்த அறக்கட்டளை சார்பில் கவர்னர் வஜூபாய் வாலாவுக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டது.


    மூத்த பத்திரிகையாளரான கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டு ஒரு ஆண்டு ஆகிறது. இதுபற்றி விசாரணை நடத்தி வரும் சிறப்பு விசாரணை குழு துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த நபர் உள்பட பலரை கைது செய்து உள்ளன. இவர்கள் இந்துத்துவா சித்தாந்த அடிப்படையில் சனதன் சன்ஸ்தா, இந்து ஜனஜாக்ருதி சமிதி அமைப்புகளால் வழிகாட்டுதலின்படி செயல்பட்டுள்ளனர்.

    இவர்கள் தான் முற்போக்கு சிந்தனையாளர்களான நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கலபுரகி ஆகியோரையும் படுகொலை செய்துள்ளனர். இந்த அமைப்பினர் வெவ்வேறு பெயர்களில் செயல்பட்டு வருங்காலத்தில் மேலும் படுகொலை செய்யக்கூடும் என்ற அச்சம் உள்ளது.

    எனவே பயங்கரவாதிகளை உருவாக்கும் அமைப்புகளை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும். அத்துடன், அமைதி காப்பது, சகிப்புத்தன்மை, மரியாதை, அரசியலமைப்பு சட்டத்தின் மதிப்பு ஆகியவை பற்றி இளம் தலைமுறையினருக்கு எடுத்துக்கூறும் வகையில் விழிப்புணர்வை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #GauriLankesh
    ×