என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர் மீட்பு"

    • மீன் பிடித்துக்கொண்டிருந்த பல படகுகள் நிலைகுலைந்தன.
    • காஸ்ட்ரோவின் படகு மட்டும் வழிமாறி தனியே பிரிந்தது.

    லிமா:

    தென் அமெரிக்க நாடான பெருவின் மார்கோனா நகரைச் சேர்ந்த மீனவர் மாக்சிமோ நாபா காஸ்ட்ரோ (வயது 61). இவர் கடந்த டிசம்பர் மாதம் சக மீனவர்களுடன் பசிபிக் பெருங்கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்றிருந்தார்.

    அங்கு 2 வாரங்கள் தங்கி மீன்பிடிக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் திடீரென அங்கு பலத்த காற்று வீசியது. இதனால் அங்கு மீன் பிடித்துக்கொண்டிருந்த பல படகுகள் நிலைகுலைந்தன.

    இதில் காஸ்ட்ரோவின் படகு மட்டும் வழிமாறி தனியே பிரிந்தது. ஆனால் அவருடன் சென்ற மற்ற மீனவர்கள் பத்திரமாக வீடு திரும்பினர்.

    இதனையடுத்து அவர்கள் அளித்த புகாரின்பேரில் கடலோர போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் இணைந்து காஸ்ட்ரோவின் உறவினர்களும் அவரை தேடி வந்தனர். எனினும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்தநிலையில் ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோ கடலோர போலீசார் அங்கு ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த ஒரு படகில் காஸ்ட்ரோ ஆபத்தான நிலைமையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை மீட்ட போலீசார் பெரு கடலோர போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    அதன்பிறகு அவரது உறவினர்களிடம் காஸ்ட்ரோ ஒப்படைக்கப்பட்டார். கடலில் மாயமான காஸ்ட்ரோ 95 நாட்களுக்கு பிறகு திரும்பியதால் குடும்பத்தினர் அவரை கட்டியணைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்தோனேசியாவில் கடந்த ஜூலை மாதம் புயலில் படகுடன் அடித்து செல்லப்பட்ட மீனவர் 49 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். #AldiNovelAdilang
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் சுலாவேசி தீவை சேர்ந்தவர் ஆல்டிநோவல் அடிலாங் (19). இவர் படகில் இருந்தபடி மீன்களை பிடித்து விற்று வருகிறார். சில கம்பெனிகள் நேரடியாக வந்து அவரிடம் இருந்து மீன்களை விலைக்கு வாங்கி செல்கின்றன.

    கடந்த ஜூலை மாதம் இந்தோனேசியாவில் புயல் தாக்கியது. அதில் அவரது படகு அடித்து செல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் கடலில் தொடர்ந்து தனியாக பயணம் செய்து கொண்டே இருந்தார்.

    49 நாட்கள் தொடர்ந்து பயணம் செய்த அவர் ஜப்பான் கடற்கரையை சென்றடைந்தார். வழியில் 10-க்கும் மேற்பட்ட கப்பல்கள் கடந்து சென்றன. அவர்களிடம் உதவி கோரினார். யாரும் அவரை காப்பாற்ற முன்வரவில்லை.


    49 நாட்களுக்கு பிறகு பனாமா நாட்டு டேங்கர் கப்பலுக்கு ரேடியோ சிக்னல் கொடுத்து தான் ஆபத்தில் இருப்பதை உணர்த்தினார். அவர்கள் அடிலாங்கை உயிருடன் மீட்டு ஜப்பான் அழைத்து வந்தனர். அங்கிருந்து அவர் இந்தோனேசியாவில் உள்ள தனது சொந்த ஊரான மனாடோவுக்கு சென்றார்.

    கடலில் தனியாக பயணம் செய்த காலத்தில் மீன்களை பிடித்து அவற்றை படகு வீட்டின் கட்டைகளை விறகாக்கி சமைத்து சாப்பிட்டு உயிர் பிழைத்ததாக கூறினார்.

    கடல் நீரை துணியால் வடிகட்டி சிறிது உப்பை அகற்றி தண்ணீர் குடித்ததாகவும் கூறினார். #AldiNovelAdilang
    நடுக்கடலில் வள்ளம் கவிழ்ந்து தத்தளித்துக் கொண்டிருந்த மீனவரை அருகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் மீட்டனர்.
    குளச்சல்:

    குளச்சல் துறைமுக தெருவைச் சேர்ந்தவர் பிராங்கிளின் (வயது 48). மீனவர். இவர் இன்று அதிகாலை தனக்கு சொந்தமான பைபர் வள்ளத்தில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றார். நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென இவரது வள்ளம் பாறையில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. 

    இதில் வள்ளத்தில் இருந்த பிராங்கிளின் கடலில் மூழ்கி தத்தளித்தார். அப்போது அந்த வழியாக முட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்து திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் நடுக்கடலில் தத்தளித்த பிராங்கிளினை கண்டதும் அருகில் சென்று அவரை மீட்டனர். 

    பின்னர் அவரை முட்டம் துறைமுகத்துக்கு கொண்டு சென்றனர். இதுபற்றிய தகவல் பிராங்கிளின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் உயிருடன் மீட்கப்பட்டதை அறிந்து உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    ×