என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொகுசு வசதிகள்"

    • 18 வழக்குகளில் பெண்களை கற்பழித்து உமேஷ் ரெட்டி கொலை செய்ததும் அடங்கும்.
    • விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ள தருண் யாருடனோ மிகவும் தீவிரமாக செல்போனில் பேசுவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

    பெங்களூரு:

    பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகாவில், பரப்பன அக்ரஹாரா சிறை உள்ளது. இங்கு 5,500-க்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை கைதிகள் உள்ளனர்.

    ரேணுகாசாமி கொலை வழக்கில் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் தர்ஷன் சொகுசு வசதி பெற்றதுடன், செல்போனில் பேசியது, நாற்காலியில் அமர்ந்து சிகரெட் புகைத்த படியே டீ குடிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகளுக்கு மீண்டும் சொகுசு வசதிகள் செய்து கொடுத்தது தொடர்பான வீடியோ நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

    பரப்பன அக்ரஹாரா சிறையில் கற்பழிப்பு வழக்கு குற்றவாளியான உமேஷ் ரெட்டி அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது 20 கற்பழிப்பு வழக்குகள் உள்ளன. அவற்றில் 18 வழக்குகளில் பெண்களை கற்பழித்து உமேஷ் ரெட்டி கொலை செய்ததும் அடங்கும். இந்த வழக்குகளில் சிறைவாசம் அனுபவித்து வரும் உமேஷ் ரெட்டி செல்போனில் பேசும் வீடியோ வெளியாகி உள்ளது. அவர் சிறைக்குள் செல்போனில் பேசியபடி அங்கும், இங்கும் சுற்றி திரிகிறார்.

    அவர் அடைக்கப்பட்டுள்ள அறையில் டி.வி. இருப்பதும் தெரியவந்துள்ளது. உமேஷ் ரெட்டி 2 விதமான செல்போன்களில் பேசும் வீடியோ வெளியாகி உள்ளது. அவர் 2 செல்போன்களை பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுவும் வீடியோவில் இடம் பெற்றிருக்கிறது. உமேஷ் ரெட்டிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இதுபோல் தங்கம் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள நடிகை ரன்யா ராவின் காதலன் தருணும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரும் செல்போனில் பேசியபடி சிறையில் சுற்றி திரியும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

    அதில், விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ள தருண் யாருடனோ மிகவும் தீவிரமாக செல்போனில் பேசுவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

    இதற்கிடையில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதியான ஜூகாத் கமீத் ஷகீலும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கும் சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜூகாத் செல்போனில் பேசியபடி சிறைக்குள் சுற்றி வரும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இதுகுறித்து பா.ஜ.க. தலைவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். இதுபற்றி நேற்று காலையில் முதல்-மந்திரி சித்தராமையாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

    ஆனால் அந்த வீடியோவை தான் பார்க்கவில்லை என்றும், அதுபற்றி அதிகாரிகளிடம் தகவல் பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்தார். அதே நேரத்தில் போலீஸ் மந்திரி பரமேஸ்வர் இந்த விவகாரம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் சென்று விட்டார்.

    இந்த நிலையில், கர்நாடக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. தயானந்த், மேற்கண்ட வீடியோ காட்சிகள் குறித்து விசாரணை நடத்தும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

    பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்க ஜாமர் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் சிறையை சுற்றி வசிக்கும் பொதுமக்களுக்கு செல்போன் சிக்னல் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    அப்படி இருந்தும் கைதிகள் எப்படி செல்போன் பயன்படுத்துகிறார்கள் என்றும், ஜாமரால் தங்களுக்கு தான் பாதிப்பு ஏற்படுவதாகவும், இந்த பிரச்சனைக்கு தீர்வு காண பல முறை போராட்டம் நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் சிறையில் உள்ள கைதிகள் செல்போன்களில் பேசுவது எப்படி என்பது தெரியவில்லை? என அப்பகுதி மக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

    புழல் சிறையில் நடத்தப்பட்ட சோதனைக்கு பின்னர் உறவினர்கள் கைதிகளுக்கு கொண்டுவரும் பொருட்களின் விலை பல மடங்காக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. #PuzhalJail
    சென்னை:

    புழல் சிறையில் கைதிகளுக்கு சொகுசு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பரபரப்பு தகவல்கள் வெளியானது. இது தொடர்பான போட்டோ ஆதாரங்களும் வெளியானது.

    இதனை தொடர்ந்து சிறையில் சோதனை நடத்தி தொலைக்காட்சி பெட்டிகள், சமையல் பாத்திரங்கள், அழகு சாதன பொருட்கள், திரைச் சீலைகள், செல்போன்கள் மெத்தைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து சிறை துறையில் நடக்கும் இந்த முறைகேடுகள் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    சிறையில் கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள் அவர்களுக்கு கொண்டு வரும் பொருட்களை விதிமுறைகளை மீறி சிறை துறை ஊழியர்களே வாங்கி கொடுத்துள்ளனர்.

    இதற்கு லஞ்சமாக பணம் பெற்று வந்தனர். சிறையில் நடத்தப்பட்ட சோதனைக்கு பின்னர் அது பல மடங்காக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    சோதனைக்கு முன்பு ரூ.250-க்கு விற்கப்பட்ட பீடி கட்டு, சோதனைக்கு பின்பு ரூ.500 ஆகியுள்ளது. ரூ.600-க்கு விற்ற சிகரெட் பெட்டி, சோதனைக்கு பின்பு ரூ.1,200 ஆகவும், 20 கிராம் பாக்கெட் கஞ்சா சோதனைக்கு பின்பு ரூ.10,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



    சோதனைக்கு முன்பு ரூ.350 ஆக இருந்த சிக்கன் பிரியாணி, சோதனைக்கு பின்பு ரூ.700 ஆகவும், மட்டன் குழம்பு சோதனைக்கு முன்பு ரூ.700, சோதனைக்கு பின்பு ரூ.1,500 ஆகவும், மட்டன் சுக்கா சோதனைக்கு முன்பு ரூ.600, சோதனைக்கு பின்பு ரூ.1,200 ஆகவும் உள்ளது.

    சிக்கன் 65 ரூ.1000 ஆகவும், ஆம்லேட் ரூ.100 ஆகவும், அவித்த முட்டை ரூ.40 ஆகவும் உள்ளது.

    சிறைகளில் ஒன்று அல்லது இரண்டு கைதிகள் மட்டுமே தங்கக்கூடிய அறைகளைப் பிடிப்பதற்கு கடும் போட்டி நிலவுகிறது. இந்த அறைகளை ஒதுக்குவதற்கு சிறைத்துறையில் பல்வேறு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. ஆனால் அந்த விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டு இப்போதும் எழுந்துள்ளது.

    புழலில் செல்வாக்குமிக்க ஒரு கைதிக்கு அறை ஒதுக்க ரூ.2 லட்சம் முன் பணம் பெறப்படுவதாகவும், பின்னர் மாதம் தோறும் ரூ.40 ஆயிரம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    இதற் கிடையே புழல் சிறையில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் சுப்பையாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. புழல் சிறையில் உள்ள ஒரு கைதி மதுரை கூலிப்படையிடம் இது தொடர்பாகப் பேசியிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இது தொடர்பாக புழல் கைதிகள் 2 பேர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சுப்பையா உள்ளிட்ட அதிகாரிகள் சிலருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. #PuzhalJail

    ×