என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர் வீடு கொள்ளை"

    ராதாபுரம் அருகே ஆசிரியர் தம்பதி வீட்டில் நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robbery

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள கும்பிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது38). இவர் நாங்குநேரி அருகே உள்ள காடன்குளம் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பானுமதி (30). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று காலை கணவன்- மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, அவர்களும் பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள், பட்டப்பகலில் அவர்களின் வீட்டு முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். வீட்டில் இருந்த பீரோவையும் உடைத்து, அதில் இருந்த 25 பவுன் தங்க நகைகள், ரொக்க பணம் ரூ.27 ஆயிரத்து 500 ஆகியவற்றையும் கொள்ளையடித்து கொண்டு ஓடி விட்டனர்.

    நேற்று மாலை பள்ளிக் கூடம் முடிந்து வீடு திரும்பிய முருகேசன், தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து முருகேசன் ராதாபுரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் சம்பவ இடத்தில் பதிவான ரேகைகள் மற்றும் தடயங்களை தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். இது தொடர்பாக ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். #Robbery

    நாட்டறம்பள்ளி அருகே ஆசிரியர் வீட்டில் நகை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். #Robbery

    நாட்டறம்பள்ளி:

    நாட்டறம்பள்ளி கருணாநிதி தெருவை சேர்ந்தவர் காமராஜ் (வயது 62). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் நேற்று இரவு வீட்டின் முன்பக்க கதவை பூட்டி விட்டு, வீட்டின் பின்பக்கம் உள்ள அறையில் தூங்கியுள்ளார்.

    நள்ளிரவில் வீட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம கும்பல் பீரோவை உடைத்து அதில் இருந்த 7 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இன்று காலை காமராஜ் எழுந்து பார்த்த போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறிகிடந்தன. அதிர்ச்சியடைந்து பீரோவை பார்த்தார் அப்போது அதில் இருந்த நகை கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து காமராஜ் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர். #Robbery

    திருவள்ளூர் அருகே ஆசிரியை வீட்டில் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த ராஜாஜிபுரத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, தனியார் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவரது மனைவி தமிழரசி. தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இருவரும் வழக்கம் போல் வீட்டை பூட்டி வெளியே சென்றனர். மாலையில் ஆசிரியை தமிழரசி வீட்டுக்கு வந்த போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 5 சவரன் நகை மற்றும் கால் கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரிந்தது. இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×