என் மலர்
நீங்கள் தேடியது "முகமது ஷமி"
- ஐதராபாத் சார்பில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா சதம் அடித்து அசத்தினார்.
- தொடர்ந்து ஆடிய ஐதராபாத் 247 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஐதராபாத்:
ஐ.பி.எல். 2025 தொடரின் 27-வது போட்டி ஐதராபாத்தில் நடந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 245 ரன்கள் குவித்தது.
ஷ்ரேயஸ் அய்யர் 36 பந்தில் 6 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 82 ரன்கள் குவித்தார்.
ஐதராபாத் அணியின் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டும், இஷான் மலிங்கா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.
இதையடுத்து, 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் இறுதியில் 18.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா 55 பந்தில் 10 சிக்சர், 14 பவுண்டரி உள்பட 141 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் ஐதராபாத் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 4 ஓவரில் விக்கெட் எடுக்காமல் 73 ரன்கள் கொடுத்தார்.
இதன்மூலம் ஒரு ஐ.பி.எல். இன்னிங்சில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த 2வது வீரர் என்ற மோசமான சாதனையை ஷமி படைத்துள்ளார்.
ஒரு ஐ.பி.எல். இன்னிங்சில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த வீரர்கள்:
ஜோப்ரா ஆர்ச்சர்: 4-0-76-0
முகமது ஷமி: 4-0-75-0
மொஹித் சர்மா: 4-073-0
சிட்னி:
இந்தியா-ஆஸ்திரேலிய கிரிக்கெட் லெவன் அணிகள் மோதும் 4 நாள் பயிற்சி ஆட்டம் சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதன் முதல்நாள் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. 2-வது நாளில் இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்தியா 358 ரன் குவித்து ‘ஆல் அவுட்’ ஆனது.
பிரித்விஷா (66 ரன்), கேப்டன் வீராட்கோலி (64 ரன்), ரகானே (56 ரன்), புஜாரா (54 ரன்), விஹாரி (53 ரன்) ஆகிய 5 வீரர்கள் அரை சதம் அடித்தனர். ஆரோன் ஹார்டி 4 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய லெவன் நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 356 ரன் எடுத்து பதிலடி கொடுத்தது. இன்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது.
தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய லெவன் 544 ரன் குவித்து ‘ஆல்ஆவுட்’ ஆனது.
நில்சென் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 170 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 100 ரன்களை எடுத்தார். பந்து வீச்சில் கலக்கிய ஆரோன்ஹார்டி பேட்டிங்கிலும் முத்திரை பதித்தார். அவர் 141 பந்தில் 86 ரன் (10 பவுன்டரி, 1 சிக்கர்) எடுத்தார். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
186 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சை விளையாடியது பிரித்விஷா பீல்டிங்கின் போது காயம் அடைந்ததால் ராகுலுடன் முரளிவிஜய் தொடக்க வீரராக ஆடினார். இருவரும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினர். இந்த 4 நாள் பயிற்சி ஆட்டம் ‘டிரா’வில் முடிந்தது.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் வருகிற 6-ந்தேதி அடிலெய்டு வில் தொடங்குகிறது. #indvsaus






