என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரேல் எல்லை"

    • சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறும் செயலாகும்.
    • காசாவிற்கு முழுமையாக உதவியை மீண்டும் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

    பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. ஒரு ஆண்டுக்கு மேலாக போர் நீடித்த நிலையில் உலக நாடுகளின் தலையீட்டால் கடந்த ஜனவரி மாதம் முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் இரு தரப்பிலும் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் 2-ம் கட்ட போர் நிறுத்த பேச்சின் போது, இஸ்ரேல் விதித்த நிபந்தனைகளை ஏற்க ஹமாஸ் தரப்பு மறுத்தது. இதனால் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் இஸ்ரேலுக்கு அதன் நட்பு நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா ஆகியவை திடீர் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், கனடா பிரதமர் மார்க் கார்னி ஆகியோர் வெளியிட்ட கூட்டு அறிக்கையில், காசாவில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் சகிக்க முடியாதது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அரசாங்கம் இந்த மோசமான நடவடிக்கைகளைத் தொடரும் வரை நாங்கள் காத்திருக்க மாட்டோம்.

    இஸ்ரேல் தனது ராணுவத் தாக்குதலை நிறுத்தி, மனிதாபிமான உதவி மீதான கட்டுப்பாடுகளை நீக்காவிட்டால் இஸ்ரேலுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை எடுப்போம். பொதுமக்களுக்கு அத்தியாவசிய மனிதாபிமான உதவியை இஸ்ரேல் தடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறும் செயலாகும். இஸ்ரேல் உடனடியாக காசாவிற்கு முழுமையாக உதவியை மீண்டும் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் 3 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மனிதாபிமான உதவிகளை, காசாவிற்குள் முழுமையாக அனுமதிக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.

    இஸ்ரேல்-பாலஸ்தீனம் எல்லைப்பகுதியான காசாவில் ஆதிக்கம் செலுத்திவரும் ஹமாஸ் போராளிகளை கண்டித்து ஐ.நா.சபையில் கொண்டு வந்த தீர்மானத்தில் இந்தியா நடுநிலை வகித்தது. #Indiaabstains #GeneralAssemblyresolution #condemnHamas #Hamas
    நியூயார்க்:

    பாலஸ்தீன எல்லையோரம் உள்ள காஸா பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் நாட்டு  ராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது.

    ஹமாஸ் போராளிகள் அவ்வப்போது இஸ்ரேல் பகுதிக்குள் ஏவுகணைகளை வீசி அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேல் ராணுவத்தினரை கொல்லும் முயற்சியில் ஈடுபட்டதாக ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் எல்லையில் கொல்லப்படுகின்றனர்.

    இந்நிலையில், ஹமாஸ் உள்ளிட்ட போராளிகள் குழுக்களை கண்டித்தும், மத்திய வளைகுடா பகுதியில் அமைதி நடவடிக்கைகளை துரிதப்படுத்த கோரியும் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா ஒரு தீர்மானத்தை இன்று முன்வைத்தது.

    இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 87 நாடுகள் வாக்களித்தன. எதிராக 58 வாக்குகள் கிடைத்தன. இந்தியா உள்பட 32 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தன. போதிய ஆதரவு இல்லாமல் இந்த தீர்மானம் தோல்வியடைந்தது.

    இந்த வாக்கெடுப்புக்கு முன்னதாக பேசிய அமெரிக்காவுக்கான ஐ.நா. தூதர் நிக்கி ஹாலே, இஸ்ரேலுக்கு எதிராக இங்கு சுமார் 500 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், ஹமாஸ் இயக்கத்தினருக்கு எதிராக ஒரு தீர்மானம்கூட கொண்டு வரப்படவில்லை.


    ஹாமாஸ் இயக்கத்தினரால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பாலஸ்தீன மக்கள்தான். அவர்களுக்காகவாவது, ஹமாஸ் நடத்திவரும் பேரழிவுகளைப் பற்றி இப்போது பேச இந்த உலகம் முன்வர வேண்டும் என்று குறிப்பிட்டார்.

    வாக்கெடுப்புக்கு பின்னர் பேசிய இஸ்ரேல் நாட்டு தூதர் டான்னி டானான், ‘அல் கொய்தா, போக்கோ ஹரம் பயங்கரவாதிகளுக்கும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை. இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தவர்கள் எல்லாம் வெட்கப்பட வேண்டும்’ என்று தெரிவித்தார்.

    இதேபோல், இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தது ஏன்? என்பது தொடர்பாக வேறு சில நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகளும் அவையில் விளக்கம் அளித்தனர். #Indiaabstains #GeneralAssemblyresolution #condemnHamas  #Hamas
    ×