என் மலர்
நீங்கள் தேடியது "ஈரோடு மதுக்கடை"
ஈரோடு மதுக்கடை முன் ரத்த காயத்துடன் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா அருகே உள்ள பிரகாசம் வீதியில் ஒரு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது.
இந்த மதுக்கடை முன் இன்று காலை ஒருவர் மயங்கி கிடப்பதாக ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு போலீசார் விரைந்தனர். அங்கு சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் குப்புற விழுந்து கிடந்ததால் முகத்தில் ரத்த காயம் இருந்தது. இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்று உடனடியாக தெரியவில்லை.
அவர் குடித்து விட்டு வரும் போது தவறி விழுந்து அடிப்பட்டு இறந்திருக்க கூடும் என போலீசார் தெரிவித்தனர்.
எனினும் அவர் இறந்தது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து அருகே உள்ள கடைகளில் உள்ள கண்காணிப்பு காமிராவில் ஏதும் தடயம் உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மர்மமான முறையில் இறந்து கிடந்தவர் புளு கலர் கட்டம் போட்ட சட்டையும், புளு கலர் பேண்ட்டும் அணிந்திருந்தார். மதுக்கடை முன் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா அருகே உள்ள பிரகாசம் வீதியில் ஒரு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது.
இந்த மதுக்கடை முன் இன்று காலை ஒருவர் மயங்கி கிடப்பதாக ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு போலீசார் விரைந்தனர். அங்கு சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் குப்புற விழுந்து கிடந்ததால் முகத்தில் ரத்த காயம் இருந்தது. இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்று உடனடியாக தெரியவில்லை.
அவர் குடித்து விட்டு வரும் போது தவறி விழுந்து அடிப்பட்டு இறந்திருக்க கூடும் என போலீசார் தெரிவித்தனர்.
எனினும் அவர் இறந்தது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து அருகே உள்ள கடைகளில் உள்ள கண்காணிப்பு காமிராவில் ஏதும் தடயம் உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மர்மமான முறையில் இறந்து கிடந்தவர் புளு கலர் கட்டம் போட்ட சட்டையும், புளு கலர் பேண்ட்டும் அணிந்திருந்தார். மதுக்கடை முன் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
ஈரோடு அருகே மதுக்கடையை திறங்கள் அல்லது பஸ்சில் சென்று மதுகுடிக்க பஸ் பாஸ் கொடுங்கள் என்று கலெக்டரிடம் குடிமகன் மனு அளித்த சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. #Drunkard
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த வெள்ளோட்டாம்பரப்பு பகுதியைச்சேர்ந்த கூலி தொழிலாளியான செங்கோட்டையன் ஈரோடு கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் கதிரவனிடம் ஒரு மனு கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-
கொடுமுடி ஒன்றியம் வெள்ளோட்டம் பரப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட வேப்பம்பாளையம் அருகே மதுபானக்கடை கட்டும் பணி நடந்து முடிந்துள்ளது இருப்பினும் இன்னும் அந்த பகுதியில் மது கடை திறக்கப்படவில்லை.
நான் ஒரு கூலித்தொழிலாளி தினமும் மது அருந்தும் பழக்கம் உடையவன் தற்போது மதுகுடிக்க பத்து கிலோ மீட்டர் வரை சென்று மதுஅருந்தி வருகிறேன். இதனால் பஸ் செலவு அதிகமாகிறது. இருசக்கர வாகனத்தில் சென்றால் போலீசார் மடக்கி கேஸ் போடுகிறார்கள். எனவே எங்கள் பகுதியில் மதுபானக் கடையை திறக்க வேண்டும் இல்லை என்றால் எனக்கு பஸ்சில் சென்றுவர பஸ் பாஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.
இந்த மனுவை பார்த்த அதிகாரிகள் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தனர். #Drunkard
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த வெள்ளோட்டாம்பரப்பு பகுதியைச்சேர்ந்த கூலி தொழிலாளியான செங்கோட்டையன் ஈரோடு கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் கதிரவனிடம் ஒரு மனு கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-
கொடுமுடி ஒன்றியம் வெள்ளோட்டம் பரப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட வேப்பம்பாளையம் அருகே மதுபானக்கடை கட்டும் பணி நடந்து முடிந்துள்ளது இருப்பினும் இன்னும் அந்த பகுதியில் மது கடை திறக்கப்படவில்லை.
நான் ஒரு கூலித்தொழிலாளி தினமும் மது அருந்தும் பழக்கம் உடையவன் தற்போது மதுகுடிக்க பத்து கிலோ மீட்டர் வரை சென்று மதுஅருந்தி வருகிறேன். இதனால் பஸ் செலவு அதிகமாகிறது. இருசக்கர வாகனத்தில் சென்றால் போலீசார் மடக்கி கேஸ் போடுகிறார்கள். எனவே எங்கள் பகுதியில் மதுபானக் கடையை திறக்க வேண்டும் இல்லை என்றால் எனக்கு பஸ்சில் சென்றுவர பஸ் பாஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.
இந்த மனுவை பார்த்த அதிகாரிகள் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தனர். #Drunkard






