search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Erode tasmac shop"

    கோடை வெயில் கொளுத்த தொடங்கியுள்ள நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. #TasmacShop
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. வெயிலின் கொடுமையிலிருந்து தப்பிக்க வாகன ஓட்டிகள் பொதுமக்கள் ஜூஸ், இளநீர் குடித்து தங்களது தாகத்தை போக்கிக் கொள்கின்றனர்.

    ஆனால் குடிமகன்கள் வெயிலின் கொடுமையிலிருந்து தப்பிக்க பீர்களை அதிக அளவு அருந்தி வருகின்றனர். இதனால் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

    கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த மாதம் வரை ரூ.29.30 கோடிக்கு 2.25 லட்சம் பீர் பாட்டில்களை குடித்து தீர்த்துள்ளனர்.

    ஈரோடு மாவட்டம் முழுவதும் 197 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இதில் 106 டாஸ்மாக் கடைகளில் கடைகளுடன் இணைந்து பார்கள் செயல்பட்டு வருகிறது. வழக்கமாக டாஸ்மாக் கடைகளில் தினசரி 3 கோடி முதல் 4 கோடி ரூபாய் அளவிற்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பண்டிகை காலங்களில் மதுபானங்களின் விற்பனை 5 கோடி ரூபாய் அளவிற்கு இருக்கும். தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பீர் விற்பனை அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 72 ஆயிரம் பீர் பெட்டிகள் ரூ.11.80 கோடிக்கும், பிப்ரவரி மாதத்தில் 85 ஆயிரம் பெட்டிகள் 13 கோடி ரூபாய்க்கும், மார்ச் மாதத்தில் இதுவரை 13 ஆயிரம் பெட்டிகள் ரூ.4.50 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது.

    ஒரு பெட்டியில் 12 பீர் பாட்டில்கள் இருக்கும். கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை ரூ.29.30 கோடிக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் பீர் பாட்டில்கள் விற்பனையாகியுள்ளது.

    கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் குடிமகன்கள் பிராந்தி, விஸ்கி, ரம் போன்ற மதுவகைகளில் இருந்து பீர் வகைகளுக்கு மாறியுள்ளனர். இதனால் பீர் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    ஏப்ரல், மே மாதங்களில் பீர்விற்பனை இதை விட கூடுதலாக விற்பனையாக வாய்ப்பு உள்ளது. மேலும் இதன் விற்பனை ரூ.20 கோடி ரூபாயை நெருங்க வாய்ப்புள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகின்றனர்.

    டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு வசூல் செய்வதாக குடிமகன்கள் புலம்பி வருகிறார்கள். இது தடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து குடிமகன்கள் கூறுகையில், தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பிராந்தி, விஸ்கி போன்ற மதுபானங்களில் இருந்து அதிக அளவில் பீர் ரகங்களுக்கு மாறி உள்ளோம். இதனால் பீர் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. வழக்கமாக டாஸ்மாக் கடைகளில் பீர் வகைகளுக்கு கூலீங் சார்ஜ் என்று கூறி 10 ரூபாயை அதிகமாக வசூல் செய்து வருகிறார்கள்.

    தற்போது கோடையையொட்டி பீர்வகைகள் அதிகமாக விற்பதால் டாஸ்மாக் கடைகளில் விற்பனையாளர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்து வருகிறார்கள். இதன் மூலமாக ஆயிரக்கணக்கான ரூபாயை வருமானம் பார்த்து வருகிறார்கள்.

    நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யும் டாஸ்மாக் பணியாளர்களை எவ்வித விசாரணையும் இன்றி பணிநீக்கம் செய்ய வேண்டும். அப்போது தான் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வது குறையும் என்றனர். #TasmacShop
    ஈரோடு மதுக்கடை முன் ரத்த காயத்துடன் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா அருகே உள்ள பிரகாசம் வீதியில் ஒரு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது.

    இந்த மதுக்கடை முன் இன்று காலை ஒருவர் மயங்கி கிடப்பதாக ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அங்கு போலீசார் விரைந்தனர். அங்கு சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் குப்புற விழுந்து கிடந்ததால் முகத்தில் ரத்த காயம் இருந்தது. இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்று உடனடியாக தெரியவில்லை.

    அவர் குடித்து விட்டு வரும் போது தவறி விழுந்து அடிப்பட்டு இறந்திருக்க கூடும் என போலீசார் தெரிவித்தனர்.

    எனினும் அவர் இறந்தது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து அருகே உள்ள கடைகளில் உள்ள கண்காணிப்பு காமிராவில் ஏதும் தடயம் உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மர்மமான முறையில் இறந்து கிடந்தவர் புளு கலர் கட்டம் போட்ட சட்டையும், புளு கலர் பேண்ட்டும் அணிந்திருந்தார். மதுக்கடை முன் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    ஈரோடு அருகே மதுக்கடையை திறங்கள் அல்லது பஸ்சில் சென்று மதுகுடிக்க பஸ் பாஸ் கொடுங்கள் என்று கலெக்டரிடம் குடிமகன் மனு அளித்த சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. #Drunkard
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த வெள்ளோட்டாம்பரப்பு பகுதியைச்சேர்ந்த கூலி தொழிலாளியான செங்கோட்டையன் ஈரோடு கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் கதிரவனிடம் ஒரு மனு கொடுத்தார்.

    அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

    கொடுமுடி ஒன்றியம் வெள்ளோட்டம் பரப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட வேப்பம்பாளையம் அருகே மதுபானக்கடை கட்டும் பணி நடந்து முடிந்துள்ளது இருப்பினும் இன்னும் அந்த பகுதியில் மது கடை திறக்கப்படவில்லை.

    நான் ஒரு கூலித்தொழிலாளி தினமும் மது அருந்தும் பழக்கம் உடையவன் தற்போது மதுகுடிக்க பத்து கிலோ மீட்டர் வரை சென்று மதுஅருந்தி வருகிறேன். இதனால் பஸ் செலவு அதிகமாகிறது. இருசக்கர வாகனத்தில் சென்றால் போலீசார் மடக்கி கேஸ் போடுகிறார்கள். எனவே எங்கள் பகுதியில் மதுபானக் கடையை திறக்க வேண்டும் இல்லை என்றால் எனக்கு பஸ்சில் சென்றுவர பஸ் பாஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

    இந்த மனுவை பார்த்த அதிகாரிகள் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தனர்.  #Drunkard
    ×