என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம்"

    • அமெரிக்க நிறுவனங்களின் மினரல் வாட்டர்கள் புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • ஸ்விகி, சொமேட்டோவில் பணிபுரிபவர்கள் சாரோவில் பணிபுரிய வாய்ப்பு அளிக்கப்படும்.

    இந்தியா உள்பட 70 நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு கடந்த 1-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதிரடியாக வரிகளை உயர்த்தினார். இந்திய பொருட்கள் மீது 25 சதவீத வரி விதித்தார். இந்த வரிவிதிப்பு கடந்த 7-ந்தேதி அமலுக்கு வந்தது.

    மேலும், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ராணுவ சாதனங்கள் ஆகியவை வாங்குவதற்கு அபராதமாக இந்திய பொருட்கள் மீது மேலும் 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. இந்த வரிவிதிப்பு கடந்த 27-ந்தேதி அமலுக்கு வந்தது. இதையடுத்து இந்திய பொருட்கள் மீதான வரி 50 சதவீதமாக உயர்ந்தது.

    50 சதவீத வரிவிதிப்பு காரணமாக, இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் ஜவுளி பொருட்கள், ஆயத்த ஆடைகள், இறால், தோல், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், விலங்கு பொருட்கள், ரசாயனங்கள், மின்சார எந்திரங்கள், என்ஜினீயரிங் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் தமிழக ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் வெங்கட சுப்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழக ஓட்டல்களில் அமெரிக்க உணவு பொருட்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.

    * பெப்சி, கோக், கேஎஃப்சி போன்ற அமெரிக்க பொருட்கள், அமெரிக்க நிறுவனங்களின் மினரல் வாட்டர்களை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    * அமெரிக்க பொருட்களுக்கு பதிலாக இந்திய பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    * உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விகி, சொமேட்டோவையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.

    * தமிழ்நாட்டை சேர்ந்த சாரோ என்ற செயலியை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளோம்.

    * ஸ்விகி, சொமேட்டோவில் பணிபுரிபவர்கள் சாரோவில் பணிபுரிய வாய்ப்பு அளிக்கப்படும்.

    இந்திய பொருட்களுக்கு அமெரிக்க 50 சதவீதம் வரி விதித்ததை எதிர்த்து ஓட்டல் உரிமையாளர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு போட்டதற்கான கை விரல் மையை காட்டினால் ஓட்டல்களில் சாப்பிடுபவர்களுக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என்று ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. #LoksabhaElections2019
    சென்னை:

    ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் வெங்கடசுப்பு கூறியதாவது:-

    தமிழகத்தில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கில் தேர்தல் நாளன்று ஓட்டுபோட்டதற்கான அடையாளமாக கைவிரலில் உள்ள மையை காண்பித்தால் மாலை 6 மணிக்கு மேல் ஓட்டலில் சாப்பிடுபவர்களுக்கு பில் தொகையில் 10 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்.

    மக்களிடையே வாக்களிப்பதற்கான விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக அனைத்து ஓட்டல்களிலும் தேர்தல் தினத்தன்று இந்த தள்ளுபடியை நடைமுறைபடுத்துகிறோம்.

    அன்றைய தினம் மாலை 6 மணி முதல் இரவு வரை இந்த தள்ளுபடி வழங்கப்படும். சென்னை மாவட்ட ஓட்டல்கள் சங்கத்தின் தலைவர் ரவி கூறும்போது, ‘சென்னை முழுவதும் மொத்தம் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டல்கள் உள்ளன. இதில் 2500 ஓட்டல்கள் எங்களுடைய சங்கத்தில் உள்ளது.

    எங்கள் சங்கத்தில் சேராத ஓட்டல்களிலும் 10 சதவீத தள்ளுபடி வழங்குவோம் என்று உறுதி அளித்துள்ளார். எங்களது அறிவிப்பை சமூக வலைதளங்களில் மக்களுக்கு தெரியப்படுத்தி வருகிறோம். வருகிற 17-ந்தேதி ஓட்டல்கள் முன்பு அறிவிப்பு பலகையும் வைக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஓட்டுபோட்டதற்கான கைவிரல் மையை காண்பித்தால் அயனாவரம் மார்க்கெட்டில் உள்ள ராஜாஸ் சிக்கன் கடையில் கோழிக்கறி விலையில் 1 கிலோவுக்கு ரூ.50 தள்ளுபடி வழங்கப்படும் என்று அதன் உரிமையாளர் முரளிபாபு அறிவித்திருந்த நிலையில் இப்போது ஓட்டல் உரிமையாளர்களும் 10 சதவீத தள்ளுபடி அறிவித்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. #LoksabhaElections2019
    ×