search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hotel owners association"

    பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு போட்டதற்கான கை விரல் மையை காட்டினால் ஓட்டல்களில் சாப்பிடுபவர்களுக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என்று ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. #LoksabhaElections2019
    சென்னை:

    ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் வெங்கடசுப்பு கூறியதாவது:-

    தமிழகத்தில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கில் தேர்தல் நாளன்று ஓட்டுபோட்டதற்கான அடையாளமாக கைவிரலில் உள்ள மையை காண்பித்தால் மாலை 6 மணிக்கு மேல் ஓட்டலில் சாப்பிடுபவர்களுக்கு பில் தொகையில் 10 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்.

    மக்களிடையே வாக்களிப்பதற்கான விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக அனைத்து ஓட்டல்களிலும் தேர்தல் தினத்தன்று இந்த தள்ளுபடியை நடைமுறைபடுத்துகிறோம்.

    அன்றைய தினம் மாலை 6 மணி முதல் இரவு வரை இந்த தள்ளுபடி வழங்கப்படும். சென்னை மாவட்ட ஓட்டல்கள் சங்கத்தின் தலைவர் ரவி கூறும்போது, ‘சென்னை முழுவதும் மொத்தம் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டல்கள் உள்ளன. இதில் 2500 ஓட்டல்கள் எங்களுடைய சங்கத்தில் உள்ளது.

    எங்கள் சங்கத்தில் சேராத ஓட்டல்களிலும் 10 சதவீத தள்ளுபடி வழங்குவோம் என்று உறுதி அளித்துள்ளார். எங்களது அறிவிப்பை சமூக வலைதளங்களில் மக்களுக்கு தெரியப்படுத்தி வருகிறோம். வருகிற 17-ந்தேதி ஓட்டல்கள் முன்பு அறிவிப்பு பலகையும் வைக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஓட்டுபோட்டதற்கான கைவிரல் மையை காண்பித்தால் அயனாவரம் மார்க்கெட்டில் உள்ள ராஜாஸ் சிக்கன் கடையில் கோழிக்கறி விலையில் 1 கிலோவுக்கு ரூ.50 தள்ளுபடி வழங்கப்படும் என்று அதன் உரிமையாளர் முரளிபாபு அறிவித்திருந்த நிலையில் இப்போது ஓட்டல் உரிமையாளர்களும் 10 சதவீத தள்ளுபடி அறிவித்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. #LoksabhaElections2019
    ×