search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Skull Fractured"

    • தகராறில் தி.மு.க நிர்வாகியை கல்லால் தாக்கி மண்டையை உடைத்தவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
    • போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள குண்டலபட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி(66). தி.மு.க தெற்கு ஒன்றிய அவைத்தலைவராக உள்ளார். இவர் நிலக்கோட்டை பூமார்க்கெட்டில் பூக்களை விற்பனை செய்துவிட்டு மீண்டும் தனது ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    பொம்மையசாமி கோவில் அருகே சென்றபோது அதேஊரை சேர்ந்த தி.மு.க கிளைச்செயலாளர் பாஸ்கர்ராஜா(45) என்பவர் அழகர்சாமியை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். மேலும் அவரை கீேழ தள்ளி கல்லால் தலையில் ஓங்கி தாக்கினார்.

    இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை விலக்கிவிட்டனர். இதில் படுகாயமடைந்த அழகர்சாமி நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நிலக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் அருண்பிரசாத் ஆகியோர் பாஸ்கர்ராஜா மீது வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    • சங்கரன்கோவில் பஜார்பகுதியில் உள்ள டீக்கடையில் பாக்கியராஜ் நின்று கொண்டிருந்தார்.
    • அப்போது அங்கு வந்த பாரதிநகரை சேர்ந்த மாரியப்பன், கருப்பசாமி மற்றும் 2 பேர் சேர்ந்து பாக்கியராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    சங்கரன்கோவில் :

    சங்கரன்கோவில் கக்கன் நகர் பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 50). இவர் ஒப்பந்த அடிப்படை யில் கட்டிட வேலைகள் செய்து வருகின்றார்.

    இந்நிலையில் அப்பகுதி யில் பாரதிநகரில் உள்ள ஒருவர் வீட்டில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்க ஒப்பந்தம் பேசியதாகவும், அந்த தொகையில் கொஞ்சம் பாக்கி வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

    சம்பவத்தன்று சங்கரன் கோவில் பஜார் பகுதியில் உள்ள டீக்கடையில் பாக்கிய ராஜ் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாரதிநகரை சேர்ந்த மாரியப்பன், கருப்பசாமி மற்றும் 2 பேர் சேர்ந்து பாக்கியராஜிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    திடீரென 4 பேரும் தங்களது இடுப்பில் மறைத்து வைத்திருந்த பீர்பாட்டிலால் பாக்கிய ராஜின் தலையில் அடித்து கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.

    இதில் காயம் அடைந்த பாக்கியராஜ் சங்கரன் கோவில் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் சங்கரன் கோவில் டவுன் போலீசார் மாரியப்பன், கருப்பசாமி உள்பட 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×