search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Constrution Worker"

    • சங்கரன்கோவில் பஜார்பகுதியில் உள்ள டீக்கடையில் பாக்கியராஜ் நின்று கொண்டிருந்தார்.
    • அப்போது அங்கு வந்த பாரதிநகரை சேர்ந்த மாரியப்பன், கருப்பசாமி மற்றும் 2 பேர் சேர்ந்து பாக்கியராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    சங்கரன்கோவில் :

    சங்கரன்கோவில் கக்கன் நகர் பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 50). இவர் ஒப்பந்த அடிப்படை யில் கட்டிட வேலைகள் செய்து வருகின்றார்.

    இந்நிலையில் அப்பகுதி யில் பாரதிநகரில் உள்ள ஒருவர் வீட்டில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்க ஒப்பந்தம் பேசியதாகவும், அந்த தொகையில் கொஞ்சம் பாக்கி வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

    சம்பவத்தன்று சங்கரன் கோவில் பஜார் பகுதியில் உள்ள டீக்கடையில் பாக்கிய ராஜ் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாரதிநகரை சேர்ந்த மாரியப்பன், கருப்பசாமி மற்றும் 2 பேர் சேர்ந்து பாக்கியராஜிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    திடீரென 4 பேரும் தங்களது இடுப்பில் மறைத்து வைத்திருந்த பீர்பாட்டிலால் பாக்கிய ராஜின் தலையில் அடித்து கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.

    இதில் காயம் அடைந்த பாக்கியராஜ் சங்கரன் கோவில் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் சங்கரன் கோவில் டவுன் போலீசார் மாரியப்பன், கருப்பசாமி உள்பட 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×