search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sitharaman"

    • மன்மோகன் சிங், ப.சிதம்பரம் உள்ளிட்டோர் தொடர்ந்து ஐந்து முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர்.
    • மொரார்ஜி தேசாய் ஆறுமுறை தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

    நிர்மலா சீதாராமன் மத்திய நிதியமைச்சராக இருந்து வருகிறார். 2019-ம் ஆண்டு பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைத்தபோது நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக பொறுப்பேற்றார்.

    அதில் இருந்து தற்போது வரை அவர்தான் நிதியமைச்சராக இருந்து வருகிறார். வருகிற 1-ந்தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இதற்கு முன்னதாக முழுமையாக 5 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். தற்போது 6-வது முறையாக பட்ஜெட் (இடைக்கால) தாக்கல் செய்ய இருக்கிறார்.

    இதன்மூலம் தொடர்ந்து ஆறு முறை பட்ஜெட் தாக்கல் செய்த 2-வது நிதியமைச்சர் என்ற சாதனையைப் படைக்க இருக்கிறார்.

    இதற்கு முன்னதாக மொரார்ஜி தேசாய் (1959-1964) ஆறு முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இதில் ஐந்து முறை முழுமையான பட்ஜெட். ஒருமுறை இடைக்கால பட்ஜெட். இதுபோன்றுதான் நிர்மலா சீதாராமனும் ஐந்து முறை முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். தற்போது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.

    மோடி தலைமையிலான பா.ஜனதா கடந்த 2014-ல் ஆட்சிக்கு வந்தது. அப்போது அருண் ஜெட்லி நிதியமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். அவர் ஐந்து பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தார். 2017-ல் பிப்ரவரி மாதம் கடைசி வேலை நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில், பிப்ரவரி 1-ந்தேதிக்கு மாற்றி முதன்முறையாக தாக்கல் செய்தார்.

    உடல்நலக்குறைவால் அவரிடம் இருந்த நிதியமைச்சர் பதவி பியூஷ் கோயலுக்கு கூடுதலாக வழங்கப்பட்டது. அவர் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    மன்மோகன் சிங், அருண் ஜெட்லி, பி. சிதம்பரம், யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் தொடர்ந்து ஐந்து முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அனைத்து மொழிகளிலும் வெளியாகி இந்த படம் வசூலில் சாதனை படைத்துள்ளது.
    • ரஜினிகாந்த் உட்பட பல்வேறு பிரபலங்களும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர்.

    பெங்களூரு:

    நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. முதலில் கன்னட மொழியில் மட்டுமே வெளியிடப்பட்ட இந்த திரைப்படம் விமர்சன ரீதியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், நல்ல வசூலையும் குவித்தது. இதையடுத்து, இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி வசூலில் சாதனை படைத்துள்ளது.

    இந்தி மொழியில் மட்டும் ரூ.47 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. ரஜினிகாந்த் உட்பட பல்வேறு திரைப்பிரபலங்களும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பெங்களூருவில் உள்ள திரையரங்கு ஒன்றில் தன்னார்வலர்கள் மற்றும் நலம் விரும்பிகள் குழுவுடன் இணைந்து இந்த திரைப்படத்தை பார்த்து ரசித்தார். 


    இது குறித்து தமது டுவிட்டர் பதிவில், கந்தாரா திரைப்படம் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.நமது செழுமையான பாரம்பரியங்களை படம் பிடித்துக் காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த திரைப்படத்தின் இயக்குநர் ரிஷப் ஷெட்டிக்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். இதையடுத்து மத்திய நிதி மந்திரிக்கு ரிஷப் ஷெட்டி நன்றி தெரிவித்து டுவிட் செய்துள்ளார்.

    பிரதமரின் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ அறைகூவலின்படி சென்னை ஆவடியில் உள்ள ராணுவ டாங்கி தொழிற்சாலையில் தயாரிப்பட்ட என்ஜின்களை பாதுகாப்பு மந்திரி நாட்டுக்கு அர்ப்பணித்தார். #Sitharaman #MadeinIndia #enginestoArmy
    சென்னை:

    இந்தியாவின் ராணுவ தளவாடங்களில் பெரும்பாலானவை வெளிநாட்டு தயாரிப்புகளாகவோ. வெளிநாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய தயாரிப்புகளாகவோதான் முன்னர் இருந்து வந்தன.

    பின்னாளில், நமது சொந்த தயாரிப்புகள் ராணுவத்தின் அனைத்து பிரிவுகளிலும் இடம்பெற தொடங்கின. மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்த பின்னர்  ‘இந்தியாவில் தயாரிப்போம்’ அறைகூவலின்படி உள்நாட்டு தயாரிப்புகள் வேகம்பிடிக்க ஆரம்பித்தது.

    இந்நிலையில், ராணுவ ‘டாங்கிகள்’ எனப்படும் பீரங்கி வாகனங்களுக்கான இரு அதிநவீன ரக என்ஜின்களை சென்னை ஆவடியில் உள்ள ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு தொழிற்சாலை நிபுணர்கள் உருவாக்கியுள்ளனர்.

    அனைத்து வகை எரிபொருளிலும் இயங்கும் T-90 பீஷ்மாடாங்கி வாகனங்களுக்கான 1000 குதிரைசக்தி திறன் கொண்ட V92S2 ரக என்ஜின் மற்றும் T-72 அஜேயா ரக டாங்கி வாகனங்களுக்கான V-46-6 ரக என்ஜின் ஆகியவை இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது.

    இதற்கு முன்னர் இந்த என்ஜின்களின் தயாரிப்பில் 27 சதவீதம் அளவுக்கு வெளிநாட்டு தொழில்நுட்பம் கலந்திருந்தது. ஆனால், தற்போது தயாரிக்கப்பட்ட இந்த இரு என்ஜின்களுமே 100 சதவீதம் உள்நாட்டு தொழில்நுட்பத்தால் உருவானவை. 

    இந்நிலையில், சென்னை ஆவடியில் உள்ள டாங்கி தொழிற்சாலை வளாகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த இரு என்ஜின்களின் தயாரிப்பு தொடர்பான ஆவணங்களை பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அவற்றை  ராணுவ துணை தளபதி தேவராஜ் அன்பு பெற்றுகொண்டார். இந்த தயாரிப்புகளின் மூலம் இங்குள்ளவர்கள் நம்மை பெருமைப்படுத்தியுள்ளதாக நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

    ரஷியாவின் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு திட்டத்தின்படி முன்னர் இந்த என்ஜின்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டபோதிலும், சில முக்கிய உதிரிபாகங்களுக்கு முன்னர் ரஷியாவின் கையை நாம் எதிர்பார்க்க வேண்டிய நிலைமை இருந்தது.

    தற்போது அந்த உதிரி பாகங்களைகூட நாம் இங்கேயே தயாரிப்பதால் வரும் பத்தாண்டுகளில் சுமார் 800 கோடி ரூபாய்வரை இந்தியாவுக்கு மிச்சமாகும் என இந்நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத்துறை தயாரிப்பு நிறுவன செயலாளர் அஜய் குமார் தெரிவித்தார். #Sitharaman #MadeinIndia #enginestoArmy
    கலவரத்தை தூண்ட திட்டம் என்றால் உள்துறை மந்திரியிடம் சொல்லுங்கள் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு தெரிவித்துள்ளார். #Chidambaram #Sitharaman
    புதுடெல்லி:

    ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், டெல்லியில் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர், “காங்கிரஸ் கட்சி முஸ்லிம் ஆதரவு கட்சியாக மாற முயற்சிக்கிறது, மதத்தை வைத்து காங்கிரஸ் அபாயகரமாக விளையாட்டு விளையாடுகிறது. 1947 பிரிவினைவாதம், மதக் கலவரம் என்று கூறி மக்களை அச்சுறுத்தி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் சமுதாய நல்லிணக்கத்துக்கு பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு காங்கிரசே பொறுப்பு” என்று கூறினார்.

    இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பதிலடி கொடுத்து டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

    அதில் அவர், “நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாட்டில் கலவரங்களைத் தூண்ட திட்டங்கள் தீட்டப்படுகின்றன என்று ராணுவ மந்திரி சொல்கிறார். இது தொடர்பான ரகசிய தகவல்களை அவர் உள்துறை மந்திரியிடம் தெரிவிக்க வேண்டும்” என்று கூறி உள்ளார்.

    மேலும், “பாகிஸ்தானை அடக்கி விட்டு, பயங்கரவாதத்தை ஒழித்து விட்டு, எல்லை தாண்டிய ஊடுருவல்களை தடுத்து நிறுத்தி விட்டு, ரபேல் போர் விமானங்கள் வாங்கி விட்டு இப்போது ராணுவ மந்திரிக்கு அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்களின் மத சார்புகளை பற்றி விசாரிப்பதற்கு நேரம் இருக்கிறது” என்றும் சாடி உள்ளார்.  #Chidambaram #Sitharaman #tamilnews 
    ×