search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SimultaneousElections"

    அரசியல் கட்சிகள் இனி இரவு 10 மணி வரை ஒலிபெருக்கி பிரசாரம் செய்யலாம் என்று தேர்தல் கமி‌ஷன் அனுமதித்துள்ளது. #SimultaneousElections #ElectionCommission

    புதுடெல்லி:

    பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தலின் போது ஒலி பெருக்கியை பயன்படுத்தி பிரசாரம் செய்வதற்கு தேர்தல் கமி‌ஷன் கடும் கட்டுப்பாடுகள் விதித்து இருந்தது.

    இரவு 10 மணிவரை ஒலி பெருக்கி பிரசாரம் செய்வதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுவதாக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை மட்டுமே ஒலி பெருக்கி மூலம் பிரசாரம் செய்ய வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷன் கட்டுப்பாடு விதித்து இருந்தது.

    இந்த நிலையில் அரசியல் கட்சிகள் சார்பில் பிரசாரத்துக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். குறிப்பாக இரவு 10 மணிவரை ஒலிபெருக்கி பிரசாரத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷனுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

    டெல்லியில் நடந்த தேர்தல் கமி‌ஷன் ஆலோசனைக் கூட்டத்திலும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த கோரிக்கையை பல நேரத்தில் வலியுறுத்தினர்.

    இதுபற்றி தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி பரிசீலித்து வந்தனர். இதையடுத்து அரசியல் கட்சிகள் கோரிக்கையை எற்று ஒலிபெருக்கி பிரசார நேரத்தை அதிகரித்து அனுமதி அளித்துள்ளது.

    இதுபற்றி டெல்லியில் தேர்தல் கமி‌ஷன் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    அரசியல் கட்சி பிரதிநிதிகள் கோரிக்கையை தேர்தல் கமி‌ஷன் பரிசீலித்து ஒலிபெருக்கி பிரசார கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. இனி இரவு 10 மணி வரை ஒலிபெருக்கி பிரசாரம் செய்யலாம் என்று அனுமதித்துள்ளது.

    இது தொடர்பாக தேர்தல் கமி‌ஷன் பிறப்பித்தது. முந்தைய உத்தரவு வாபஸ் பெறப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #SimultaneousElections #ElectionCommission

    பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி தங்கள் கருத்துக்களை மத்திய சட்ட ஆணையத்திடம் பதிவு செய்தனர். #SimultaneousElections #Congress

    புதுடெல்லி:

    தேர்தல் செலவினங்களை குறைக்கவும், அடிக்கடி தேர்தல் நடைபெறுவதை தவிர்க்கவும் பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாமா என்று மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

    இதற்கு தேர்தல் கமி‌ஷன் வரவேற்பு தெரிவித்ததுடன் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தயார் என்று அறிவித்தது. இது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்களின் கருத்துக்களை கேட்டு வருகிறது.

    இதற்கிடையே மத்திய சட்ட கமி‌ஷனும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமா? இதில் உள்ள இடர்பாடுகள் என்ன என்பது குறித்தும் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி கருத்து கேட்டது. இதில் கட்சிகள் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பரவலாக ஆதரவும், எதிர்ப்பும் ஏற்பட்டுள்ளது.

    காங்கிரஸ் சார்பில் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி கருத்துக்களை தெரிவிக்க குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ப.சிதம்பரம், கபில்சிபல், அபிஷேக் சிங்வி, ஆனந்த் சர்மா, ஜெ.டி.சீலம் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.


    இந்த குழு ஆலோசனை நடத்தியதில் பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியம் இல்லை என்று முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் டெல்லியில் சட்ட கமி‌ஷனை நேரில் சந்தித்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது இந்திய கூட்டாட்சி தத்துவத்துக்கும் ஜனநாயக நெறிமுறைகளுக்கும் எதிரானது. எனவே காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.

    பா.ஜனதா சார்பில் கருத்துக்களை தெரிவிக்க மேலும் கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. பா.ஜனதா கூட்டணி கட்சிகளிடையேயும் இதில் கருத்து வேறுபாடு உள்ளது. அகாலி தளம் மற்றும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    அ.தி.மு.க. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஆதரவு தெரிவித்தாலும் 2025-ம் ஆண்டில் இருந்து இதை அமல்படுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளது.

    திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி, தி.மு.க., தெலுங்கு தேசம், இடது சாரிகள், ஜெ.டி.எஸ். ஆகிய கட்சிகள் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    பாராளுமன்றம் மற்றும் சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ரூ.5 ஆயிரம் கோடி செலவாகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. #SimultaneousElections #ElectionCommission

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) தேர்தல் நடத்தப்படும் போது மாநில சட்டசபைகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்த மத்தியில் ஆளும் பா.ஜ.க. விரும்புகிறது.

    இது தொடர்பாக மத்திய சட்ட ஆணையம் கடந்த வாரம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்டது. அப்போது 4 கட்சிகள் மட்டுமே ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன. 11 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

    இந்த நிலையில் சட்ட ஆணையத்துக்கு தலைமை தேர்தல் ஆணையமும் பதில் அளித்துள்ளது. அதில் பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட என்னென்ன செய்ய வேண்டும், எவ்வளவு செலவாகும் என்பன போன்ற விபரங்கள் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

    குறிப்பாக ஓட்டுப்பதிவு நடத்த ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் 2 மடங்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தேவைப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடி அதிகாரிகள், ஊழியர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்க கால அவகாசம் தேவைப்படும். அதற்கும் கணிசமான தொகை செலவாகும்.

     


    ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமானால் கூடுதலாக பல லட்சம் எந்திரங்கள் வாங்கப்பட வேண்டும். அப்படி கூடுதலாக மின்னணு எந்திரங்கள் வாங்குவதற்கு மட்டும் சுமார் ரூ.5 ஆயிரம் கோடி தேவைப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் தனது பதிலில் சுட்டிக்காட்டியுள்ளது.

    பொதுவாக மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை 3 தேர்தலுக்குத்தான் பயன்படுத்த முடியும். அதன் பிறகு புதிய எந்திரங்கள் வாங்க வேண்டும். எனவே 15 ஆண்டுகளுக்கு ஒரு தடவை எந்திரங்களுக்கே சில ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும்.

    மேலும் வரும் ஆண்டுகளில் ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. எனவே மின்னணு எந்திரங்கள் தேவை அதிகரிக்கும். அதற்கும் கூடுதல் செலவாகும்.

    2024-ம் ஆண்டு தேர்தலின் போது மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக கூடுதலாக 12 லட்சம் ஓட்டுச்சாவடிகள் அமைக்க வேண்டியதிருக்கும். அப்போது மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்கள் வாங்குவதற்கே சுமார் ரூ.14 ஆயிரம் கோடி தேவைப்படும் என்று சட்ட ஆணையத்திடம் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    ×