search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "selvamagal scheme"

    • அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கு தொடர்ந்து 2-வது முறையாக வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.
    • 'செல்வமகள்' சேமிப்பு திட்ட வட்டி விகிதம் 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதம் ஆகிறது.

    புதுடெல்லி :

    வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) ரிசர்வ் வங்கி 6 தவணைகளாக மொத்தம் 2.5 சதவீதம்வரை உயர்த்தி உள்ளது. அதை பின்பற்றி, வங்கிகள், வாடிக்கையாளர்களின் டெபாசிட்டுக்கு அளிக்கும் வட்டி விகிதத்தை உயர்த்தின.

    இந்தநிலையில், அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கு தொடர்ந்து 2-வது முறையாக வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. அவற்றுக்கு காலாண்டுக்கு ஒருமுறை வட்டி மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டுக்கான வட்டி விகிதத்தை நேற்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்தது.

    வட்டி விகிதம் 0.7 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, தேசிய சேமிப்பு சான்றிதழுக்கான வட்டி, 7 சதவீதத்தில் இருந்து 7.7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    பெண் குழந்தைகள் பெயரில் போடப்படும் 'செல்வமகள்' சேமிப்பு திட்ட வட்டி விகிதம் 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதம் ஆகிறது. கடந்த முறை, இதற்கு வட்டி உயர்த்தப்படாதது குறிப்பிடத்தக்கது.

    கிசான் விகாஸ் பத்திரத்துக்கான வட்டி, 7.2 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாகவும், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி 8 சதவீதத்தில் இருந்து 8.2 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கிசான் விகாஸ் பத்திரம், 120 மாதங்களுக்கு பதிலாக 115 மாதங்களில் முதிர்வடையும்.

    ஓராண்டு கால டெர்ம் டெபாசிட்டுக்கான வட்டி, 6.6 சதவீதத்தில் இருந்து 6.8 சதவீதமாகவும், 2 ஆண்டு கால டெபாசிட் வட்டி 6.8 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாகவும், 3 ஆண்டுகால டெபாசிட் வட்டி 6.9 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகவும், 5 ஆண்டுகால டெபாசிட் வட்டி 7 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

    மாதாந்திர வருவாய் திட்ட வட்டி, 30 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து 7.4 சதவீதம் ஆகிறது. அதே சமயத்தில், பொது சேமநல நிதி (7.1 சதவீதம்), சேமிப்பு டெபாசிட் (4 சதவீதம்) ஆகியவற்றுக்கு பழைய வட்டி விகிதமே நீடிக்கும் என்று நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

    பொது வருங்கால வைப்பு நிதி, செல்வமகள் சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கன வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. #SmallSavingsRates
    புதுடெல்லி:

    பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி காலாண்டுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படுகிறது. அவ்வகையில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டிற்கான வட்டி விகிதம் குறித்து மத்திய நிதியமைச்சகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை 0.30 சதவீதம் மற்றும் 0.40 சதவீதம் என்ற அளவில் உயர்த்தி அறிவித்துள்ளது.

    இந்த புதிய சுற்றறிக்கையின்படி 1 முதல் மூன்று ஆண்டுகள் வரையிலான சேமிப்பு டெபாசிட்டுகளுக்கு 0.30 சதவீதம் வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. 5 ஆண்டு டெபாசிட்டுகளுக்கு 0.40 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎப்), செல்வமகள் சேமிப்பு திட்டம், தேசிய சேமிப்பு பத்திரம் (என்எஸ்சி), அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கும் 0.40 சதவீதம் வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.


    வட்டி விகிதம் உயர்த்தப்பட்ட பிறகு, பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் தேசிய சேமிப்பு பத்திரங்களுக்கு 8 சதவீத வட்டி கிடைக்கும். செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு 8.5 சதவீத வட்டி கிடைக்கும். மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்திற்கு 8.7 சதவீத வட்டி கிடைக்கும். இந்த வட்டி உயர்வு அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.

    கடந்த இரண்டு காலாண்டுகளாக வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இந்த காலாண்டில் வட்டி உயர்த்தப்பட்டதை முதலீட்டாளர்கள் வரவேற்றுள்ளனர். #SmallSavingsRates

    ×