என் மலர்
நீங்கள் தேடியது "selvamagal scheme"
- அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கு தொடர்ந்து 2-வது முறையாக வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.
- 'செல்வமகள்' சேமிப்பு திட்ட வட்டி விகிதம் 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதம் ஆகிறது.
புதுடெல்லி :
வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) ரிசர்வ் வங்கி 6 தவணைகளாக மொத்தம் 2.5 சதவீதம்வரை உயர்த்தி உள்ளது. அதை பின்பற்றி, வங்கிகள், வாடிக்கையாளர்களின் டெபாசிட்டுக்கு அளிக்கும் வட்டி விகிதத்தை உயர்த்தின.
இந்தநிலையில், அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கு தொடர்ந்து 2-வது முறையாக வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. அவற்றுக்கு காலாண்டுக்கு ஒருமுறை வட்டி மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டுக்கான வட்டி விகிதத்தை நேற்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்தது.
வட்டி விகிதம் 0.7 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, தேசிய சேமிப்பு சான்றிதழுக்கான வட்டி, 7 சதவீதத்தில் இருந்து 7.7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகள் பெயரில் போடப்படும் 'செல்வமகள்' சேமிப்பு திட்ட வட்டி விகிதம் 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதம் ஆகிறது. கடந்த முறை, இதற்கு வட்டி உயர்த்தப்படாதது குறிப்பிடத்தக்கது.
கிசான் விகாஸ் பத்திரத்துக்கான வட்டி, 7.2 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாகவும், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி 8 சதவீதத்தில் இருந்து 8.2 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கிசான் விகாஸ் பத்திரம், 120 மாதங்களுக்கு பதிலாக 115 மாதங்களில் முதிர்வடையும்.
ஓராண்டு கால டெர்ம் டெபாசிட்டுக்கான வட்டி, 6.6 சதவீதத்தில் இருந்து 6.8 சதவீதமாகவும், 2 ஆண்டு கால டெபாசிட் வட்டி 6.8 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாகவும், 3 ஆண்டுகால டெபாசிட் வட்டி 6.9 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகவும், 5 ஆண்டுகால டெபாசிட் வட்டி 7 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.
மாதாந்திர வருவாய் திட்ட வட்டி, 30 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து 7.4 சதவீதம் ஆகிறது. அதே சமயத்தில், பொது சேமநல நிதி (7.1 சதவீதம்), சேமிப்பு டெபாசிட் (4 சதவீதம்) ஆகியவற்றுக்கு பழைய வட்டி விகிதமே நீடிக்கும் என்று நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
- கோட்டத்தின்கீழ் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
- தபால் நிலையங்களிலும் செல்வமகள் திட்டக்கணக்கை தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
கோவை:
பெண் குழந்தைகளின் நலனுக்காக மத்திய அரசு கடந்த 2015-ம் ஆண்டு செல்வமகள் சேமிப்பு திட்டத்தை அறிமுகம் செய்தது. இதன்படி திட்டக்கணக்குக்கு 8.2 சதவீதம் வட்டி மற்றும் வருமான வரிச்சட்டப்பிரிவு 80 சி-யின்படி, ஒரு நிதியாண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை வரிச்சலுகை வழங்கப்படுகிறது. இதனால் செல்வமகள் திட்டத்தில் இணைவோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.
கோவையை தலைமையிடமாக கொண்ட மேற்கு மண்டலத்தில் கோவை, பொள்ளாச்சி, தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, திருப்பத்தூர் திருப்பூர் ஆகிய அஞ்சல் கோட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.
அங்கு பெண் குழந்தைகள் பயனடையும் வகையில் வெள்ளிக்கிழமைதோறும் செல்வ மகள் சேமிப்பு கணக்குகள் தொடங்க, கோட்டத்தின்கீழ் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும் கிளை அஞ்சலகங்கள் தவிர அனைத்து தபால் நிலையங்களிலும் செல்வமகள் திட்டக்கணக்கை தொடங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
இதுகுறித்து கோவை மேற்கு மண்டல தபால்துறைத்தலைவர் சரவணன் கூறுகையில், கோவை மண்டலத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடங்கியதில் இருந்து இதுவரை 8.1 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளதாகவும், அந்த வகையில் மத்திய அரசிடம் ரூ.4522 கோடி டெபாசிட் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.
பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி காலாண்டுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படுகிறது. அவ்வகையில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டிற்கான வட்டி விகிதம் குறித்து மத்திய நிதியமைச்சகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை 0.30 சதவீதம் மற்றும் 0.40 சதவீதம் என்ற அளவில் உயர்த்தி அறிவித்துள்ளது.

கடந்த இரண்டு காலாண்டுகளாக வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இந்த காலாண்டில் வட்டி உயர்த்தப்பட்டதை முதலீட்டாளர்கள் வரவேற்றுள்ளனர். #SmallSavingsRates






