search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "select"

    • மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களும் பெற்று வருகின்றனர்.
    • வருகிற 28-ந் தேதி தேதி செங்கல்பட்டுவில் விளையாட்டு ேபாட்டி நடைபெறவுள்ளது.

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவிகள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.

    குறிப்பாக கைப்பந்து, கால்பந்து, டேபிள் டென்னிஸ், ஆக்கி, சதுரங்கம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களும் பெற்று வருகின்றனர்.

    இவர்களை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஊக்கப்படுத்தி வரும் நிலையில் குன்னூர் ஸ்டேன்ஸ் பள்ளியில் 68 மாணவ, மாணவிகள் தற்போது மாநில அளவிலான போட்டிகளில் விளையாட தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

    வருகிற 28-ந் தேதி தேதி செங்கல்பட்டுவில் நடைபெற உள்ள மாநில விளையாட்டுப் போட்டிகளில் இந்த மாணவ - மாணவிகள் பங்கேற்பதற்காக தற்போது குன்னூரில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    • கட்சி நிர்வாகிகளை சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார்
    • மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைசெயலாளரும், நகரமன்ற துணைத் தலைவருமான வாஷிம்ராஜாவை சந்தித்தார்.

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்ட தி.மு.க மகளிர் அணி துணை அமைப்பாளராக பிரபாவதி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் அவர் குன்னூர் நகரசெயலாளர் ராமசாமி, மாநில சிறுபான்மை பிரிவு துணைசெயலாளர் அன்வர்கான், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைசெயலாளரும், நகரமன்ற துணைத் தலைவருமான வாஷிம்ராஜா, பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா மற்றும் நகரமன்ற தலைவர் சீலாகேத்ரின், நகர அவைதலைவர் தாஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார்.

    இலக்கிய துறையில் சிறப்பாக செயலாற்றியவர்களுக்கு அளிக்கப்படும் மிக உயரிய ‘ஞானபீடம்’ விருதுக்கு ஆங்கில எழுத்தாளர் அமிதவ கோஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். #JnanpithAward #AmitavGhosh
    புதுடெல்லி:

    இலக்கிய துறையில் சாதனை படைத்தவர்களுக்கு சாகித்ய அகாடமி, ஞானபீடம் உள்ளிட்ட விருதுகளை ஆண்டுதோறும் மத்திய அரசு வழங்கி கவுரவித்து வருகிறது.
     
    அந்த வகையில், இந்த ஆண்டின் (54-வது) ஞானபீடம் விருதுக்கு பிரபல ஆங்கில நாவலாசிரியர் அமிதவ் கோஷ் (62) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    அமிதவ் கோஷ் 1956-ம் ஆண்டில் கொல்கத்தாவில் பிறந்தவர். தற்போது நியூயார்க்கில் வசித்து வருகிறார். இவரது மனைவி டெபோரா பேக்கர்.

    டெல்லியில் படித்த இவர், ஆக்ஸ்போர்டு மற்றும் அலெக்சாண்டிரியா பல்கலைக்கழகங்களில் படித்துள்ளார். பத்மஸ்ரீ மற்றும் சாகித்ய அகாடமி விருதுகளை பெற்றுள்ளார்.



    ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட 15 மொழிகளுள் சிறந்த எழுத்தாளருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. 7 லட்சம் ரூபாய்க்கான காசோலை, தங்கமும் செம்பும் கலந்த பட்டயமும், பாராட்டுப் பத்திரம் மற்றும் பித்தளையால் ஆன கலைமகள் சிலையை உள்ளடக்கிய இந்த விருது 1961-ல் நிறுவப்பட்டது.

    இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழிகளில் எழுதும் எந்த ஓர் எழுத்தாளரும் இந்த விருதுக்கு தகுதியானவர் ஆவார். இதுவரை, அதிகபட்சமாக, கன்னட மொழி எழுத்தாளர்கள் 7 முறையும், இந்தி மொழி எழுத்தாளர்கள் 6 முறையும் இந்த விருதைப் பெற்றுள்ளார்கள். தமிழில் பிரபல எழுத்தாளர்கள் அமரர் அகிலன், ஜெயகாந்தன் ஆகியோர் கடந்த 1975 மற்றும் 2002-ம் ஆண்டுகளில் ஆகியோர் ஞானபீடம் விருதினை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. #JnanpithAward #AmitavGhosh
    ×