என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "seized for sale"

    • ஈரோடு மாவட்டம் கடம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் கடம்பூர் மற்றும் மாக்கம்பாளையம் பகுதியில் ரோந்து சென்று ஆய்வு செய்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களிடம் இருந்து ரூ.11 ஆயிரத்து 280 மதிப்புள்ள 28 கிலோ போதை மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கடம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் கடம்பூர் மற்றும் மாக்கம்பாளையம் பகுதியில் ரோந்து சென்று ஆய்வு செய்தனர்.

    போலீசார் தொடர்ந்து கடம்பூர் மாக்கம்பாளையம் ரோடு அஞ்சனை பிரிவு பகுதியில் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர்.

    அவர்களை போலீசார் நிறுத்தி அவர்கள் கொண்டு வந்த பைகளை சோதனை செய்தனர். அப்போது அதில் புகையிலை மற்றும் போதை பொருட்கள் இருந்ததும் அதை அவர்கள் விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் டி.என்.பாளையம் அடுத்த வாணிப்புதூர் பகுதியை சேர்ந்த குருகோகுல் (24), தங்கவேல் (64) என தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களிடம் இருந்து ரூ.11 ஆயிரத்து 280 மதிப்புள்ள 28 கிலோ போதை மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×