என் மலர்
நீங்கள் தேடியது "School Management Committee meeting"
- உடையார்பாளையம் வடக்கு நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
- மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க வேண்டும். அவர்களின் தொடர்ச்சியான வருகையை கண்காணிக்க வேண்டும்
அரியலூர் :
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வடக்கு நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மேலாண்மை குழு தலைவர் கவிதா தலைமை தாங்கினார்.
தலைமை ஆசிரியர் ஹரிசுந்தர்ராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், வட்டார கல்வி அலுவலர் ராஜாத்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
அவர் பேசுகையில், மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க வேண்டும். அவர்களின் தொடர்ச்சியான வருகையை கண்காணிக்க வேண்டும், என்றார். கூட்டத்தில், மாணவர்கள் திருக்குறள் மற்றும் வாய்ப்பாடுகள் ஆகியவற்றை ஒப்பித்து பாராட்டு பெற்றனர்.
- ஜவ்வாதுமலை பள்ளியில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
போளூர்:
ஜவ்வாது மலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பண்டிரேவ் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் ஆணைக்கிணங்க பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் கீதா தலைமை வகித்தார்.
தலைமை ஆசிரியர் மன்னர் சாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பள்ளி மானியம் பராமரிப்பு செலவு செய்தது ஒப்புதல் பெறப்பட்டது.
உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். முடிவில் செல்வம நன்றி கூறினார்.
- உடையாகுளம்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைப்பெற்றது.
- ஆசிரியர்கள் தியாகராஜன் வனஜா ஜெயராமன் ஆகியோர் போதை பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினர்
திருச்சி :
திருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றியம் உடையாகுளம்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைப்பெற்றது.
கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் க.சண்முகம் தலைமை வகித்தார். ஆசிரியர் மனோகர் வரவேற்றார். ஆசிரியர்கள் தியாகராஜன் வனஜா ஜெயராமன் ஆகியோர் போதை பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினர்.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் செல்வரங்கம் பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் பன்னீர்செல்வம் உறுப்பினர்கள் சக்திவேல் ரவிக்குமார் தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு குறித்து மாணவர்களிடமும் பொதுமக்களடையும் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. இல்லம் தேடி கல்வியில் அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ள பெற்றோர்களுக்குஅறிவுறுத்தப்பட்டது. பள்ளி மாணவர்கள் நூலக புத்தகத்தை பயன்படுத்துவது குறித்தும் வாசிப்புத்தலன் மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
முடிவில் ஆய்வக உதவியாளர் பழனியப்பன் நன்றி கூறினார்.






