என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளிமேலாண்மை குழு கூட்டம்"

    • உடையார்பாளையம் வடக்கு நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
    • மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க வேண்டும். அவர்களின் தொடர்ச்சியான வருகையை கண்காணிக்க வேண்டும்

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வடக்கு நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மேலாண்மை குழு தலைவர் கவிதா தலைமை தாங்கினார்.

    தலைமை ஆசிரியர் ஹரிசுந்தர்ராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், வட்டார கல்வி அலுவலர் ராஜாத்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

    அவர் பேசுகையில், மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க வேண்டும். அவர்களின் தொடர்ச்சியான வருகையை கண்காணிக்க வேண்டும், என்றார். கூட்டத்தில், மாணவர்கள் திருக்குறள் மற்றும் வாய்ப்பாடுகள் ஆகியவற்றை ஒப்பித்து பாராட்டு பெற்றனர்.

    ×