search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Samundipuram"

    • 2 கி.மீ. தூரத்துக்கு மேல் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் படு மோசமாக சாலைகள் உள்ளது.
    • ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் சாமுண்டிபுரம் செல்லக்கூடிய சாலை போக்குவரத்து முக்கி–யத்துவம் வாய்ந்ததாகும். குமார் நகரில் தொடங்கி சாமுண்டிபுரம் வரை உள்ள குடியிருப்புகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். குமார் நகர் பள்ளிக்கூடம், செல்லம்மாள் காலனி பள்ளிக்கூடம் மற்றும் தனியார் மருத்துவம–னைகளும் இந்த பகுதியில் உள்ளன. பெரும்பாலும் பனியன் தொழிலாளர்கள் குடும்பங்களும், தினசரி கூலி வேலை செய்யும் தொழிலாளர் குடும்பங்களும் இப்பகுதியில் வசித்து வருகின்றனர்.

    திருப்பூர் வீரபாண்டியில் இருந்து 15 வேலம்பாளையம் வரை செல்லக்கூடிய 1 ஏ/பி என்ற வழித்தடப் பேருந்து இந்த வழியில் இயங்கி வந்தது. அத்துடன் காவிலிபாளையம் மற்றும் வஞ்சிபாளையம் செல்லக்கூடிய சில பேருந்துகளும் இவ்வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் கொரோனா பொது முடக்கத்தின்போது 2020-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி முதல் அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்ட நிலையில் இந்த சாலையிலும் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு தற்போது வரை 27 மாதங்களுக்கு மேலாக பேருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்த சாலையில் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட 4- குடிநீர் திட்டம் மற்றும் பாதாளச் சாக்கடை அமைப்பதற்காக குழாய்கள் பதிக்கும் பணியை மேற்கொண்டதே ஆகும். இத்தகைய பணிகள் செய்தால் முடிந்தவுடன் சாலைகளைச் செப்பனிட வேண்டும். ஆனால் இந்த சாலையில் 2 கி.மீ. தூரத்துக்கு மேல் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில், படு மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. கற்கள் பெயர்ந்து சிதிலமடைந்து காணப்படுகிறது. மக்கள் நடந்து செல்வ தற்குக்கூட மிகவும் சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக கடந்த மாமன்ற கூட்டத்தில், இப்பகுதியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், நாகராஜ், குணசேகரன், தங்கராஜ் உள்ளிட்டோர் சரமாரியாக கேள்வி எழுப்பினர். 2 ஆண்டு காலமாக போக்குவரத்து முடங்கியிருக்கும் நிலையில் இந்த சாலையை சீரமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தினர். மாநகராட்சி நிர்வாகம் மெத்தனப் போக்கை கடைபிடிக்காமல், அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் இந்த பகுதியில் மீண்டும் பேருந்து போக்குவரத்து நடைபெறுவதற்கு உரிய ஏற்பாடுகளை விரைந்து செய்ய வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தினர். ஆனால் தொடர்ந்து அதே நிலை நீடிப்பது பொதுமக்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

    திருப்பூர் மாநகராட்சி 57-வது வார்டு திருக்குமரன் நகர் 1-வது வீதியில் சாக்கடை வசதி இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறும்போது," எங்கள் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. ஆனால் சாக்கடை வசதி இல்லை. இதனால் வீட்டின் கழிவுநீர் அனை–த்தும் வீதிகளில் தேங்கி, சுகாதாரமற்ற நிலை நிலவுகிறது. நாள்தோறும் தேங்கிநிற்கும் நீரில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி கொசுத்தொந்தரவு மற்றும் துர்நாற்றம் உள்ளிட்டவை ஏற்படுகிறது. ஆகவே எங்கள் பகுதியில் சாக்கடை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்" என்றனர்.

    ×