search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Samayanallur"

    • மதுரை சமயநல்லூரில் நாளை மின்தடை ஏற்படும்.
    • இந்த தகவலை சமயநல்லூர் மின் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை சமயநல்லூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சமயநல்லூர், தேனூர், கட்டப்புளி நகர், தோடனேரி, சத்தியமூர்த்தி நகர், வைரவநத்தம், தனிச்சியம், நகரி, திருவாலவாயநல்லூர், அதலை, பரவை, விஸ்தாரா அப்பார்ட்மெண்ட், பரவை மெயின்ரோடு, மங்கையர்கரசி கல்லூரி பகுதிகள், பொதும்பு, பரவை மார்க்கெட், கோவில்பாப்பாகுடி, அழகாபுரி, புதுப்பட்டி, சின்னகவுண்டம்பட்டி, சிறுவாலை ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும். இந்த தகவலை சமயநல்லூர் மின் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    • கோவில்பாப்பாகுடியில் நாளை மின்தடை ஏற்படும்.
    • சமயநல்லூர் மின்னியல் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் நாளை (21-ந்தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    விளாங்குடி பெப்சி மெயின்ரோடு, சரவணாநகர், பரவை, நகரி, தனிச்சியம்,தோடனரி, சத்தியமூர்த்திநகர், பொதும்பு, கோவில்பாப்பாகுடி, மணியஞ்சி, திருவாலவாயநல்லூர், டபேதார் சந்தை, தேனூர், சமயநல்லூர், அதலை, வைரவநத்தம், சேம்பர், காமாட்சிபுரம், துவரிமான், பாய்ஸ்டவுன் ஏரியா, புல்லூத்து, கொடிமங்கலம், கீழமாத்தூர், மேலமாத்தூர், லாலாசத்திரம், சத்திரவெள்ளாளபட்டி, வலையபட்டி, மறவபட்டி, எல்லையூர், தெத்தூர்,ராமகவுண்டன்பட்டி, டி.மேட்டுப்பட்டி, பண்ணைகுடி, வலசை, மேட்டுப்பட்டி, சுகர்மில் ஏரியா, செம்மினிபட்டி, குட்லாடம்பட்டி,அங்கப்பன்கோட்டம், சமத்துவபுரம், ராமராஜபுரம், நரியம்பட்டி, விக்கிரமங்கலம், காடுபட்டி, கோவில்பட்டி, வையத்தான், அய்யம்பட்டி, கோழிப்பட்டி, கிருஷ்ணா புரம்,மணல்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று சமயநல்லூர் மின்னியல் செய ற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    • வாடிப்பட்டி, சமயநல்லூரில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
    • மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, கொண்டையம்பட்டி, துணை மின் நிலையங்களில் நாளை (17-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    இதேபோல் சமயநல்லூர், தனிச்சியம் பீடரில் பராமபரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வாடிப்பட்டி, அங்கப்பன் கோட்டம், சொக்கலிங்கபுரம், கச்சைகட்டி, குலசேகரன்கோட்டை, குட்லாடம்பட்டி, குட்டி க்கரடு, பெருமாள்பட்டி, பூச்சம்ப ட்டி, ராமையன்பட்டி, சாணாம்பட்டி, செம்மினிபட்டி, சமத்துவபுரம், விராலிப்பட்டி, சி.புதூர், வடுகப்பட்டி, கள்வேலி ப்பட்டி, தனிச்சியம், ஆல ங்கொட்டாரம், திருமால் நத்தம்.

    கொண்டையம்பட்டி, நடுப்பட்டி, கீழக்கரை, மேல சின்னணம்பட்டி, கோவில்பட்டி, தனிச்சியம் பிரிவு, வடுகப்பட்டி, கட்டக்குளம், ராயபுரம், மேட்டுநீரேத்தான், எல்லையூர், டி. மேட்டுப்பட்டி, கரடிக்கல், கெங்கமுத்தூர், நாராயணபுரம் ராமகவுண்டன்பட்டி பகுதிகள்.

    சத்தியமூர்த்தி நகர், தோடனேரி, திருவாலவாயநல்லூர், வைரவநத்தம், விட்டங்குளம், ஆனைக்குளம், சித்தாலங்குடி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்றதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 17 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரை:

    மதுரை மாவட்டம், சமயநல்லூர் பகுதியில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

    அதன் பேரில் சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பெண் உள்பட 4 பேர் அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றனர். அவர்களிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசினர்.

    இதனைத் தொடர்ந்து 4 பேரையும் போலீசார் சோதனை செய்தனர். அவர்கள் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் வைத்திருந்தது தெரியவந்தது.

    தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை யார் கொடுத்தனர்? என போலீசார் விசாரித்துக் கொண்டிருந்தபோது, 2 பேர் தப்பி ஓட முயன்றனர். இருப்பினும் போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்தனர்.

    4 பேரிடம் இருந்து 19 ஆயிரத்து 570 வெளிமாநில லாட்டரிகள் மற்றும் ரூ.2 லட்சத்து 17 ஆயிரத்து 660 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து இன்ஸ்பெக்டர் தர்மர் விசாரணை நடத்தினார்.

    தொடர்ந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றதாக வாடிப்பட்டி கட்டக்குளம் பகுதியைச் சேர்ந்த கணேசன் (வயது58), பரவையைச் சேர்ந்த பாண்டி (65), சேதுராமன் (50), அவரது மனைவி மகாலட்சுமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் மகாலட்சுமி தவிர 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    ×