search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs.11 lakh"

    • அங்கன்வாடி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.
    • தற்போது போதுமான கட்டிட வசதி அடிப்படை வசதி இல்லாத குடிசை வீட்டில் செயல்பட்டு வருகிறது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், ராராமுத்திரகோட்டை ஊராட்சியில் 11 லட்ச ரூபாய் மதிப்பில் புதியதாக அங்கன்வாடி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.

    இதனால் இப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மைய குழந்தைகள் தற்போது போதுமான கட்டிட வசதி அடிப்படை வசதி இல்லாத குடிசை வீட்டில் செயல்பட்டு வருகிறது.

    அங்கன்வாடி குழந்தைகளின் நலன் கருதி உடனடியாக புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறக்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.

    • அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்பருப்பு 293 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
    • தேங்காய்பருப்பு 11 லட்சத்து 37 ஆயிரத்து 957-க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

    மொடக்குறிச்சி:

    அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்பருப்பு 293 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் முதல்தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 82 ரூபாய் 77 காசுக்கும், அதிகபட்ச விலையாக 84 ரூபாய் 67 காசுக்கும், சராசரி விலையாக 84 ரூபாய் 55 காசுக்கும், ஏலம் போனது.

    இதேபோல் 2-ம் தரம் குறைந்தபட்ச விலையாக 65 ரூபாய் 92 காசுக்கும், அதிகபட்ச விலையாக 78 ரூபாய் 69 காசுக்கும், சராசரி விலையாக 76 ரூபாய் 65 காசுக்கு ஏலம் போனது.

    மொத்தமாக 14,278 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பு 11 லட்சத்து 37 ஆயிரத்து 957-க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

    ×