search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rocky"

    இந்திய ராணுவ வீரர்களுக்கு ஒரு லட்சம் திருக்குறள் ராக்கி தயாரிக்கும் பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது

    கரூர், 

    கரூர் பரணி பார்க் சாரணர் மாவட்டம் மற்றும் தேசிய மாணவர் படை சார்பாக இராணுவ வீரர்களுக்கு அனுப்புவதற்காக ஒரு லட்சம் திருக்குறள் ராக்கி தயாரிக்கும் பணி பரணி பள்ளி வளாகத்தில் தொடங்கியது. 7வது ஆண்டாக நடைபெறும் இந்நிகழ்விற்கு பரணி பார்க் கல்விக் குழும தாளாளர் மோகனரெங்கன், செயலர் பத்மாவதி மோகனரெங்கன் தலைமை தாங்கினர். தேசிய மாணவர் படை தமிழ்நாடு இரண்டாவது பட்டாலியன் தலைமை அதிகாரி லெப்டிணன்ட் கர்னல் அருண் குமார் ஒரு லட்சம் திருக்குறள் ராக்கி தயாரிக்கும் பணியை தொடங்கி வைத்தார்.இது குறித்து தமிழ்நாடு மாநில சாரணர் உதவி ஆணையர் ராமசுப்ரமணியன் கூறுகையில், தொடர்ந்து ஏழாவது ஆண்டாக இந்த நற்செயலை செய்வதில் பரணி பார்க் கல்விக் குழுமம் மிகவும் பெருமைக்கொள்கிறது. கடந்த 2017 முதல், கரூர் பரணி பார்க் கல்வி நிறுவனங்களின் சார்பாக எல்லையைப் பாதுகாக்கும் நமது இராணுவ வீரர்களுக்கு ராக்கிகளை அனுப்பி வருகிறோம். 2017-ல் 15 ஆயிரம் ராக்கிகள், 2018-ல் 16 ஆயிரம் ராக்கிகள், 2019-ல் ஒரு லட்சம் ராக்கிகள் மற்றும் 2020, 2021-ல் ஒவ்வொரு ஆண்டும் 25 ஆயிரம் ராக்கிகள் அனுப்பப்பட்டன. (கோவிட் தொற்று நோய் இருந்தபோதிலும் அனுப்பப்பட்டன). கடந்த 2022-ம் ஆண்டு 1 லட்சத்து 50 ஆயிரம் ராக்கிகள் அனுப்பப்பட்டன. அதற்காக இந்தியக் குடியரசுத் தலைவர் புது தில்லி குடியரசுத் தலைவர் மாளிகைக்கு நேரில் அழைத்துப் பாராட்டியது மிகவும் உற்சாகமூட்டுவதாக அமைந்தது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு இந்திய, முப்படைகளுக்கு நமது மகிழ்ச்சி மற்றும் நன்றியின் அடையாளமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து ஒரு லட்சம் திருக்குறள் ராக்கிகளை தயார் செய்து வருகிறோம். திருக்குறள் எண் 766ஐ 18 இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து பதித்துள்ளோம். என்று அவர் கூறினார்.இந்நிகழ்வில் பரணி பார்க் சாரணர் மாவட்ட செயலர் பிரியா, பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி, பரணி பார்க் முதல்வர் சேகர் பரணி பார்க் தேசிய மாணவர் படை அலுவலர் செல்வராசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    நாயை மையமாக வைத்து உருவாகி வரும் ‘ராக்கி’ படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். #Rocky #Srikanth
    ஸ்ரீகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘ராக்கி’. இதில் இவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இவருடன் ஒரு நாய்க்குட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. விபத்தில் அடிபட்ட ஒரு நாய்க்குட்டியை சிகிச்சை கொடுக்க வைத்து காப்பாற்றி, ராக்கி என்று பெயர் வைக்கிறார் ஸ்ரீகாந்த். 

    ராக்கி மிகவும் புத்திசாலியாகவும் இருப்பதால் போலீஸ் துறை துப்பறியும் நாய்கள் பயிற்சி நிலையத்தில் சேர்த்து பயிற்சி பெற வைக்கிறார். எம்.எல்.ஏ.வுடன் ஏற்படும் பிரச்சனையில், ஸ்ரீகாந்தை கொலை செய்து விடுகிறார்கள். ஆனால், ராக்கி ஸ்ரீகாந்தை கொலை செய்தவர்களை எப்படி கண்டுபிடிக்கிறது என்பதை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்கள்.



    இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விவேக் வெளியிட்டார். இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருக்கிறது. 
    பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் பாரதிராஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வில்லனாக நடிக்க இருக்கிறார். #BharathiRaja #Rocky
    கல்லுக்குள் ஈரம் படத்துக்கு பின்னர் படங்களில் நடிக்காமல் இருந்த பாரதிராஜாவை தனது ஆயுத எழுத்து படத்தில் வில்லனாக மணிரத்னம் நடிக்க வைத்தார்.

    தொடர்ந்து ‘பாண்டிய நாடு’ படத்தில் பயந்த சுபாவம் கொண்டவராகவும், ‘குரங்கு பொம்மை’ படத்தில் வெகுளியாகவும் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். ராம் இயக்கத்தில் வெளியான ‘தரமணி’ படத்தில் ஹீரோவாக அறிமுகமான வசந்த் ரவி நடிக்கும் படத்தில் பாரதிராஜா மீண்டும் வில்லனாக நடிக்கிறார்.



    ராக்கி என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் அருண் மாதேஸ்வரன். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, தர்புகா சிவா இசையமைக்கிறார். #BharathiRaja #Rocky
    ×