என் மலர்
நீங்கள் தேடியது "robbery money"
- மலைக்கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியவரிடம் வழிமறித்த ஒரு வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை தருமாறு கேட்டுள்ளார்.
- புகாரின்பேரில் கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பழனி:
கோவையைச் சேர்ந்தவர் ராஜா. இவர் தனது குடும்பத்துடன் பழனி கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்து முடித்து விட்டு மின் இழுவை ரெயில் மூலம் அடிவாரம் வந்தார். அவரது குடும்பத்தினர் முன்னே சென்று விட ராஜா தனது கார் நிறுத்தியுள்ள இடத்தை நோக்கி வந்து கொண்டு இருந்தார். அப்போது அவரை வழிமறித்த ஒரு வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை தருமாறு கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜா தன்னிடம் இருந்த ரூ.2000 பணத்தை அவரிடம் கொடுத்தார்.
இதன் பிறகு அடிவாரம் போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்த ப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளின் அடிப்படையில் குற்றவா ளியை தேடினர். இதில் ராஜாவிடம் பணத்தை பறித்தது பழனி மதன புரத்தைச் சேர்ந்த தனுஷ் (25) என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப டுத்தி சிறையில் அடைத்த னர்.
பழனி பகுதியில் கோவி லுக்கு வரும் பக்தர்களை குறி வைத்து இது போன்று அடிக்கடி வழிப்பறி சம்ப வங்கள் நடந்து வருகிறது. மேலும் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்தும் நகை பறிப்பு நடந்து வருகிறது. இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் வியா பாரிகள் வலியுறுத்தியுள்ள னர்.
பெரம்பூர்:
பெரம்பூர் பி.பி ரோட்டில் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரை நிறுத்தி விசாரித்தனர்.
அதில் இருந்த ஒருவன் தப்பி ஓடிவிட்டான். மற்றொருவனை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவன் தாம்பரத்தை சேர்ந்த ராம்கி என்பதும், தப்பி ஓடியவன் ஆந்திரா மாநில நகரியை சேர்ந்த சுரேஷ் என்பதும் தெரிந்தது.
இருவரும் சேர்ந்து பல்வேறு இடங்களில் வழிப்பறி, கொள்ளை மற்றும் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் கொள்ளையடித்த பணத்தில் நகரியில் சொகுசு பங்களா கட்டி நடிகைகளுடன் உல்லாசமாக இருந்து வாழ்க்கை நடத்தி வந்ததும் தெரிந்தது.
கைதான ராம்கியின் மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளன. 2009-ம் ஆண்டு தாம்பரத்தில் சாதிக் பாட்ஷா, 2015-ல் காஞ்சீபுரத்தில் பெருமான், 2016-ல் வண்டலூரில் விஜயராஜ், 2017-ல் சூலூர் பேட்டையில் பன்னீர்செல்வம் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்கிக்கு தொடர்பு உள்ளது.
இதேபோல் அவன் மீது கோவை, திருவண்ணாமலை, செஞ்சி, ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. 5 முறை குண்டர் சட்டத்திலும் ஜெயிலுக்கு சென்று உள்ளான்.
அவனிடமிருந்து ஒரு கார், அரிவாள்கள், 20 பவுன் நகை, செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மீட்கப்பட்ட கார் சேலையூரை அடுத்த அகரம் தென்நகரை சேர்ந்த யாழினி என்பவருக்கு சொந்தமானதாகும். அதனை ராம்கி திருடி நம்பர் பிளேட்டை மாற்றி கொள்ளைக்கு பயன்படுத்தி வந்துள்ளான்.
தப்பி ஓடிய சுரேசை பிடிக்க தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.