என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
பழனி: கோவிலுக்கு வந்த பக்தரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு - தொடர் சம்பவங்களால் பீதி

- மலைக்கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியவரிடம் வழிமறித்த ஒரு வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை தருமாறு கேட்டுள்ளார்.
- புகாரின்பேரில் கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பழனி:
கோவையைச் சேர்ந்தவர் ராஜா. இவர் தனது குடும்பத்துடன் பழனி கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்து முடித்து விட்டு மின் இழுவை ரெயில் மூலம் அடிவாரம் வந்தார். அவரது குடும்பத்தினர் முன்னே சென்று விட ராஜா தனது கார் நிறுத்தியுள்ள இடத்தை நோக்கி வந்து கொண்டு இருந்தார். அப்போது அவரை வழிமறித்த ஒரு வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை தருமாறு கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜா தன்னிடம் இருந்த ரூ.2000 பணத்தை அவரிடம் கொடுத்தார்.
இதன் பிறகு அடிவாரம் போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்த ப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளின் அடிப்படையில் குற்றவா ளியை தேடினர். இதில் ராஜாவிடம் பணத்தை பறித்தது பழனி மதன புரத்தைச் சேர்ந்த தனுஷ் (25) என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப டுத்தி சிறையில் அடைத்த னர்.
பழனி பகுதியில் கோவி லுக்கு வரும் பக்தர்களை குறி வைத்து இது போன்று அடிக்கடி வழிப்பறி சம்ப வங்கள் நடந்து வருகிறது. மேலும் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்தும் நகை பறிப்பு நடந்து வருகிறது. இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் வியா பாரிகள் வலியுறுத்தியுள்ள னர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
