search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "road picket"

    • கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் உள்ள குறைகளை எடுத்துக் கூறினர்.
    • பேரூராட்சி பகுதியில் அனைத்து வரிகளும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சி அலுவலகத்தில் மன்ற கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு மன்ற தலைவர் வள்ளி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் பிரதீப் குமார், துணைத்தலைவர் யூனைஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் உள்ள குறைகளை எடுத்துக் கூறினர்.

    அதன் விவரம் வருமாறு:-

    13-வது வார்டு கவுன்சிலர் கிரிஜா: எனது வார்டில் நடைபெறும் பணிகள் தரம் இருப்பதி ல்லை. இது தொடர்பாக ஒப்பந்த–தாரரிடம் பலமுறை முறையிட்டும் அலட்சியமாக பதில் அளிக்கிறார். இது தொடர்பாக பொது–மக்களிடம் இருந்து பல்வேறு புகார்கள் வருகிறது.எனவே ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.

    2-வது வார்டு கவுன்சிலர் மாதேவ்: எனது வார்டில் எந்த பணிகளும் நடைபெறுவதில்லை. இது தொடர்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    மேலும் பேரூராட்சி பகுதியில் அனைத்து வரிகளும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதனால் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வார்டுகளில் நடைபெறும் பணிகள் குறித்த விவரங்களை கவுன்சிலர்களுக்கு தர வேண்டும் என்றுக்கோரி துணைத்தலைவர் யூனைஷ் பாபு, கவுன்சிலர்கள் மாதேவ், கிரிஜா, ஹனிபா, நாசர், ஜோஸ், ரம்ஷினா, சாய்னா, முகேஷ், சாய் பிரியா உள்பட 12 பேர் மன்ற கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர். பின்னர் அலுவலகம் முன்பு அமர்ந்து கோஷம் எழுப்பினர்.

    சில கவுன்சிலர்கள் அலுவலகத்தின் வெளியே உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

    குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து திருவள்ளூர்- ஊத்துக்கோட்டை சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த ஒதப்பை மற்றும் ஆற்றுப்பாக்கம் கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2 மாதமாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

    இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திருவள்ளூர்- ஊத்துக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். கடந்த 2 மாதங்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திருவள்ளுர்- ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்

    தகவல் அறிந்து வந்த பென்னாலூர்பேட்டை போலீசார் மற்றும் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தற்காலிகமாக லாரிகள் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றும் விரைவில் குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர்.

    இதையடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘ஒதப்பை பகுதியில் அரசு குவாரி மூலம் மணல் எடுக்க அனுமதி அளித்த போது நிர்ணயித்த அளவை விட கூடுதல் ஆழத்தில் மணல் எடுத்ததால் ஆற்று நீர் வற்றிப் போனது.

    இதனால் ஒதப்பை மற்றும் ஆற்றுப்பாக்கம் பகுதியில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஆழ்துளை கிணறு அமைத்தாலும் நீர் வராததால் மக்கள் குடிநீருக்காக மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்’ என்றனர்.

    ×