search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rewind 2023"

    • அரையிறுதியில் உலகின் 3-ம் நிலை வீரரான ஃபேபியானோ கருணாவை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறினார்.
    • மேக்னஸ் கார்ல்சனுடன் பல ஆண்டுகளாக செஸ் உலகக்கோப்பை போட்டியில் பல இந்தியர்கள் விளையாடியுள்ளனர்.

    உலக கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்றது. இதன் அரை இறுதியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருணாவுடன் மோதினார்.

    அரையிறுதி சுற்றில் பிரக்ஞானந்தா தன்னை எதிர்த்து விளையாடிய கருணாவை 3.5-2.5 புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் உலக கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றார். இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார். இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்று இருந்ததால், சாம்பியனாக அறிவிக்கப்பட்டார்.

    மேக்னஸ் கார்ல்சனுடன் பல ஆண்டுகளாக செஸ் உலகக்கோப்பை போட்டியில் பல இந்தியர்கள் விளையாடியுள்ளனர். ஆனால் 2000 மற்றும் 2002ல் விஸ்வநாதன் ஆனந்த் மட்டுமே இறுதிச்சுற்றில் விளையாடி முதல் இடத்தை பிடிக்கமுடிந்தது. அதன்பின்னர், கடந்த 20 ஆண்டுகளில், இறுதிச் சுற்றுக்கு இந்தியர்கள் யாரும் செல்லவில்லை.

    எட்டு சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் பெரும்பாலான இந்திய வீரர்களால் முதல்-இரண்டாம் சுற்றுக்கு அப்பால் செல்ல முடியவில்லை. ஆனால், இந்த ஆண்டு, உலகக் கோப்பையின் காலிறுதி போட்டியில், எட்டு நபர்கள் தேர்வானார்கள். அதில் நான்கு இந்தியர்கள் இருந்தனர். அதாவது இறுதி எட்டு வீரர்களில் பாதி பேர் ஒரு நாட்டைச் சேர்ந்தவர்கள். சீனா, ரஷ்யா அல்லது போலந்து மற்றும் இங்கிலாந்தில் இருந்து ஒரு வீரர் கூட இல்லை. அதனால் இந்த போட்டியில் இந்தியாவின் ஆதிக்கம் இருப்பதை நம்மால் உணர முடிந்தது.

     

    மேலும், இந்த போட்டியில் பங்குபெற்ற வீரர்கள் பெரும்பாலும், இருபதுகள் மற்றும் இருபதுகளின் தொடக்கத்தில் உள்ள வீரர்கள். இந்தியாவின் இளம் தலைமுறை செஸ் விளையாட்டை எப்படி உள்வாங்கி உள்ளது என்பதற்கு இந்த இளம் முகங்களே சாட்சி.

    FIDE புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த 17 விளையாட்டு வீரர்கள் உலக கோப்பை போட்டிக்கு சென்றனர். அதில் 10 ஆண்களும், 7 பெண்களும் அடங்குவர். கடந்த முறை, ரஷியாவில் 2021ல் FIDE உலக கோப்பை போட்டிக்கு நான்கு பெண்கள் உள்பட இந்திய வீரர்கள் பங்குபெற்றனர்.

    18 வயதிலேயே தன்னுடைய பெயரை வரலாற்றில் மிக தீர்க்கமாக பதித்துள்ளார் பிரக்ஞானந்தா. மிகவும் இளம் வயதில் செஸ் உலக்கோப்பை இறுதிப்போட்டியில் நுழைந்த முதல் வீரர் என்ற பெருமையும் பிரக்ஞானந்தா பெற்றுள்ளார். உலக சாம்பியனை கடைசி வரை போராட விட்ட பிரக்ஞாந்தாவை முதலமைச்சர் உள்பட பல சினிமா பிரபலங்களும் இவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

    • புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி மே 28-ம் தேதி திறந்துவைத்தார்.
    • மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே பிரதமர் மோடி செங்கோலை நிறுவினார்.

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி மே 28-ம் தேதி திறந்து வைத்தார். அங்கு மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே செங்கோல் நிறுவப்பட்டது. நாடு விடுதலை பெற்றபோது ஆட்சிமாற்றத்தின் அடையாளமாக செங்கோல் வழங்கப்பட்டதாக மத்திய அரசு கூறியது.


    புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை அழைக்காதது ஏன் என எதிர்க்கட்சிகள் சர்ச்சையை கிளப்பின. மேலும், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 20 எதிர்க்கட்சிகள் இந்த விழாவைப் புறக்கணித்தன.

     


    • ஹோண்டா சிட்டி போன்ற பிளாட்ஃபார்மிலேயே இந்த கார் உருவாக்கப்பட்டது.
    • இந்த கார் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கார் மாடல்கள் இந்த ஆண்டு துவங்கியதில் இருந்தே தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்டன. இதில் முன்னணி பிரான்டுகள் துவங்கி, ஆடம்பர கார் நிறுவனங்களின் மாடல்கள் வரை பலதரப்பட்ட வாகனங்கள் இடம்பெற்றுள்ளன.

    அந்த வகையில், 2023 ஆண்டு இந்திய சந்தையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகமான கார் மாடல்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.


     

    ஹோண்டா எலிவேட்:

    காம்பேக்ட் எஸ்.யு.வி. பிரிவில் கவனம் செலுத்தும் நோக்கில் ஹோண்டா அறிமுகம் செய்த கார் மாடல் - ஹோண்டா எலிவேட். இந்த கார் மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா, ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், வோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷக் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகின்றன. ஹோண்டா சிட்டி போன்ற பிளாட்ஃபார்மிலேயே இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

     


    கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்:

    கியா இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எஸ்.யு.வி-யாக செல்டோஸ் மாடல் உள்ளது. இந்த காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் இந்த ஆண்டு அறிமுகமாகி பெரும் வரவேற்பை பெற்றது. புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், ADAS அம்சங்கள் இந்த காரின் குறிப்பிடத்தக்க அம்சங்களாக இருக்கின்றன. இத்துடன் இந்த கார் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.


     

    டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட்:

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பிரபலமான நெக்சான் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை அறிமுகம் செய்தது. நெக்சான் மட்டுமின்றி அதன் எலெக்ட்ரிக் வெர்ஷனான நெக்சான் EV மாடலும் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனில் அறிமுகம் செய்து டாடா நிறுவனம் அசத்தியது.

     


    ஹூண்டாய் வெர்னா & எக்ஸ்டர்:

    ஹூண்டாய் நிறுவனம் தனது ஆறாவது தலைமுறை வெர்னா மாடலை இந்த ஆண்டு அறிமுகம் செய்தது. ஹூண்டாயின் பாராமெட்ரிக் டிசைன் கொண்ட செடான் கார் என்ற பெருமையுடன் புதிய தலைமுறை வெர்னா மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுபோன்ற டிசைன் இந்தியாவில் வேறு எந்த செடான் மாடலிலும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கார் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    வெர்னாவை தொடர்ந்து ஹூண்டாய் அறிமுகம் செய்த மிகப்பெரிய மாடல் எக்ஸ்டர். இந்த கார் மூலம் ஹூண்டாய் நிறுவனம் மினி எஸ்.யு.வி. பிரிவில் களமிறங்கியுள்ளது. புதிய ஹூண்டாய் எக்ஸ்டர் மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.


     

    மாருதி சுசுகி ஃபிரான்க்ஸ்:

    நெக்சா பிரான்டில் அறிமுகமான முதல் காம்பேக்ட் எஸ்.யு.வி. என்ற பெருமையை ஃபிரான்க்ஸ் பெற்றது. மாருதி சுசுகியின் மிகப் பெரிய வெளியீடாக ஃபிரான்க்ஸ் அமைந்தது. இந்த மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் பூஸ்டர் ஜெட் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் CNG ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. 

    ×