search icon
என் மலர்tooltip icon

    Recap 2023

    2023 ரீவைண்ட்: உலககோப்பை செஸ் போட்டியில் கார்ல்சனை மிரட்டிய தமிழக சிறுவன்
    X

    2023 ரீவைண்ட்: உலககோப்பை செஸ் போட்டியில் கார்ல்சனை மிரட்டிய தமிழக சிறுவன்

    • அரையிறுதியில் உலகின் 3-ம் நிலை வீரரான ஃபேபியானோ கருணாவை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறினார்.
    • மேக்னஸ் கார்ல்சனுடன் பல ஆண்டுகளாக செஸ் உலகக்கோப்பை போட்டியில் பல இந்தியர்கள் விளையாடியுள்ளனர்.

    உலக கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்றது. இதன் அரை இறுதியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருணாவுடன் மோதினார்.

    அரையிறுதி சுற்றில் பிரக்ஞானந்தா தன்னை எதிர்த்து விளையாடிய கருணாவை 3.5-2.5 புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் உலக கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றார். இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார். இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்று இருந்ததால், சாம்பியனாக அறிவிக்கப்பட்டார்.

    மேக்னஸ் கார்ல்சனுடன் பல ஆண்டுகளாக செஸ் உலகக்கோப்பை போட்டியில் பல இந்தியர்கள் விளையாடியுள்ளனர். ஆனால் 2000 மற்றும் 2002ல் விஸ்வநாதன் ஆனந்த் மட்டுமே இறுதிச்சுற்றில் விளையாடி முதல் இடத்தை பிடிக்கமுடிந்தது. அதன்பின்னர், கடந்த 20 ஆண்டுகளில், இறுதிச் சுற்றுக்கு இந்தியர்கள் யாரும் செல்லவில்லை.

    எட்டு சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் பெரும்பாலான இந்திய வீரர்களால் முதல்-இரண்டாம் சுற்றுக்கு அப்பால் செல்ல முடியவில்லை. ஆனால், இந்த ஆண்டு, உலகக் கோப்பையின் காலிறுதி போட்டியில், எட்டு நபர்கள் தேர்வானார்கள். அதில் நான்கு இந்தியர்கள் இருந்தனர். அதாவது இறுதி எட்டு வீரர்களில் பாதி பேர் ஒரு நாட்டைச் சேர்ந்தவர்கள். சீனா, ரஷ்யா அல்லது போலந்து மற்றும் இங்கிலாந்தில் இருந்து ஒரு வீரர் கூட இல்லை. அதனால் இந்த போட்டியில் இந்தியாவின் ஆதிக்கம் இருப்பதை நம்மால் உணர முடிந்தது.

    மேலும், இந்த போட்டியில் பங்குபெற்ற வீரர்கள் பெரும்பாலும், இருபதுகள் மற்றும் இருபதுகளின் தொடக்கத்தில் உள்ள வீரர்கள். இந்தியாவின் இளம் தலைமுறை செஸ் விளையாட்டை எப்படி உள்வாங்கி உள்ளது என்பதற்கு இந்த இளம் முகங்களே சாட்சி.

    FIDE புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த 17 விளையாட்டு வீரர்கள் உலக கோப்பை போட்டிக்கு சென்றனர். அதில் 10 ஆண்களும், 7 பெண்களும் அடங்குவர். கடந்த முறை, ரஷியாவில் 2021ல் FIDE உலக கோப்பை போட்டிக்கு நான்கு பெண்கள் உள்பட இந்திய வீரர்கள் பங்குபெற்றனர்.

    18 வயதிலேயே தன்னுடைய பெயரை வரலாற்றில் மிக தீர்க்கமாக பதித்துள்ளார் பிரக்ஞானந்தா. மிகவும் இளம் வயதில் செஸ் உலக்கோப்பை இறுதிப்போட்டியில் நுழைந்த முதல் வீரர் என்ற பெருமையும் பிரக்ஞானந்தா பெற்றுள்ளார். உலக சாம்பியனை கடைசி வரை போராட விட்ட பிரக்ஞாந்தாவை முதலமைச்சர் உள்பட பல சினிமா பிரபலங்களும் இவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    Next Story
    ×