search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "REVOKED"

    வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் அறிவிப்பு

    அருவங்காடு,

    தென்காசி மாவட்டம் மாவட்டம் கடையத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் கடந்த 30-ந் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள உள்ள சுற்றுலா தலங்களை பார்த்துவிட்டு ஊட்டியில் இருந்து தனியார் பஸ்சில் கோவைக்கு வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது மரப்பாலம் அருகே வந்த போது 50 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியது. இதில் 9 பேர் பலியானதுடன் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இது தொடர்பாக குன்னூர் போலீசார் பஸ் டிரைவர்கள் முத்துக்குட்டி, கோபால் மற்றும் பஸ் உரிமையாளர் சுப்ரமணி, சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதனிடையே சிகிச்சையில் இருந்து வந்த ஓட்டுநர் முத்துக்குட்டியை போலீசார் கைது செய்து, ஊட்டி நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் பொறுப்பற்ற நிலையில் பஸ் ஓட்டி சென்றதற்காக முத்துக்குட்டியின் ஓட்டுனர் உரிமம் 10 ஆண்டு காலத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

    • ஆலத்தூர்கேட் பஸ் ஸ்டாப் பகுதியில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தப்பட்டது
    • கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் பலர் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மனு அளித்தனர்.

    இதில் ஆலத்தூர் கேட் கிராம பொதுமக்கள் சார்பில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது-

    திருச்சி முதல் சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, ஆலத்தூர் ஊர் இருபுறமும் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் 400 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம் .

    கிழக்கு பகுதியில் அரசு ஆரம்ப பள்ளியும், நியாய விலைகடையும் உள்ளது. மேற்கு பகுதியில் பாலதண்டாயுதபாணி கோவில் மற்றும் தோட்டக்கலை அலுவலகம் மற்றும் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது .நாளொன்றுக்கு 5ஆயிரம் கிராம பொது மக்கள் அச்சாலையை கடக்க வேண்டியுள்ளது.

    இதனால் சாலையை கடக்கும் பொழுது அடிக்கடி விபத்து, உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே விபத்தை தடுக்கும் விதமாக அந்த பகுதியில் மேம்பாலம் வசதி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • ஆசிரியரின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்யகோரி வலியுறுத்தப்பட்டது.
    • மாணவரின் தலையில் காயம் ஏற்பட்டது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள எஸ்.களபம் அரசு தொடக்கப் பள்ளியில் மொத்தம் 39 மாணவ, மாணவிகள் பயின்று வருன்றனர். 40 ஆண்டுகள் பழமையான இப்பள்ளிகட்டிடத்தில் ஆங்காங்கே வி ரிசல் ஏற்பட்டுள்ளதுடன், மேற்கூரையின் உள்பகுதியில் சிமென்ட்பூச் பசு பெயர்ந்து விழுந்ததால், 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1.20 லட்சத்தில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள இக்கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட கல்வித்துறை அலுவலர்கள் வழியாகவும், நேரடியாகவும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

    இந்நிலையில் கடந்த 21-ந் தேதி பள்ளியின் மேற்கூறை இடிந்து விழுந்தது. இதில் 4-ம் வகுப்பு பயின்றுவந்த மாணவன் பரத் காயங்களுடன் உயிர்தப்பினார். இதில் மாணவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதன்காரணமாக, பள்ளியில் கவனக்குறைவாக செயல்பட்டதாகக் கூறி பள்ளித் தலைமை ஆசிரியர் மகாலட்சுமியை புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் மஞ்சுளா பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

    பள்ளிக்க ட்டிடம் பலவீனமாக இருந்ததற்கு தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்வது ஏற்கத்தக்கதல்ல. எனவே, பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டத் தலைவர் குமரேசன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின்மா நில பொதுச்செயலாளர் ரங்கராஜன், தமிழ்நாடு ஆசிரியர் முனேற்ற சங்கத்தின் மணிகண்டன் ஆகியோர் வலிறுத்தியுள்ளனர்.

    ×