search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "resolved"

    • நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு சார்பில் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • புதுவையில் கவர்னர் தமிழிசை 75 அரசு பள்ளிகளுக்கு நேரடியாக செல்ல உள்ளார்.

    புதுச்சேரி:

    நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு சார்பில் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    புதுவையில் கவர்னர் தமிழிசை 75 அரசு பள்ளிகளுக்கு நேரடியாக செல்ல உள்ளார். இதனை தொடங்கினார். இன்று நீடராஜப்பர் வீதியில் உள்ள சவரிராயலு நாயக்கர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்றார். அவரை மாணவிகள் வரவேற்றனர்.

    பின்னர் அங்கு நடந்த விழாவில் கவர்னர் தமிழிசை பங்கேற்றார். அங்கு பொம்மலாட்ட நிகழ்ச்சி நடந்தது. அதில் விரைவு உணவை தவிர்ப் பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    தொடர்ந்து பள்ளி ஆசிரியர் பொம்மைகள் மூலம் கவர்னரிடம் கேள்வி கேட்கும் நிகழ்ச்சியை நடத்தினார். அதில் தம்பதிகள் கவர்னரிடம் கேள்வி கேட்பதுபோல நிகழ்ச்சி அமைந்தது.

    இதில் புதுவையில் உங்களுக்கு பிடித்த இடம் எது? என கேள்வி கேட்டனர். அதற்கு கவர்னர், பாரதியார் நினைவு இல்லம்தான் எனக்கு பிடித்த இடம் என்று தெரிவித்தார். மேலும் மாணவர்கள் நன்றாக படிக்கவும், விளையாடவும், சாப்பிடவும் வேண்டும். மாணவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றார். உ ங்களுக்கு டாக்டராக இருப்பது விருப்பமா? கவர்னராக இருப்பது விருப்பமா? என்ற கேள்விக்கு பதிலளித்த கவர்னர், டாக்டர் கவர்னர் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

    கவர்னராகவோ டாக்டராகவோ வர நம் வேலைகளை, கடமைகளை நிறைவாக செய்ய வேண்டும். அப்போது நீங்கள் விரும்புவது கிடைத்து விடும் என்றார். கொரோனாவை தடுப்பது எப்படி? என கேட்டபோது அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். கிருமிகள் வாய், மூக்கு வழியாகத்தான் நுரையீரலுக்கு செல்கிறது. எனவே வாய், முகத்தை அடைத்துவிட்டால் கிருமி ஏமாந்துபோகும். கைகளை சுத்தமாக வைக்க வேண்டும். வீட்டுக்கு சென்று அம்மா, அப்பா, தாத்தா, பாட்டியிடம் தடுப்பூசி போட்டாச்சா? என கேளுங்கள். போடாவிட்டால் தடுப்பூசி போட சொல்லுங்கள் என்றார்.

    இறுதியில் ஒரு மாணவி, நான் சைக்கிளில் பள்ளிக்கு வருகிறேன். மிகவும் போக்குவரத்து நெரிசலாக உள்ளதே? என கேட்டார். அதற்கு பதிலளித்த கவர்னர், போக்குவரத்து நெரிசலை சீரமைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சைக்கிளில் வரும்போது பாதுகாப்பாகவும், சாலையின் ஓரமாகவும் வர வேண்டும். விரைவில் நெரிசல் சீர் செய்யப்படும் என்று பதிலளித்தார்.

    அரசுத்துறைகள் முடக்கம் முடிவுக்கு வரும் வரை நாடாளுமன்றத்தில் உரையாற்ற மாட்டேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார். #DonaldTrump
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் நாடாளுமன்றத்தில் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபைகளின் உறுப்பினர்கள் மத்தியில் ஜனாதிபதி உரையாற்றுவது வழக்கம்.

    பிரதிநிதிகள் சபையின் தலைவர் விடுக்கும் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த உரையை நிகழ்த்துவார். பட்ஜெட் செய்தி, நாட்டின் பொருளாதார நிலை உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் ஜனாதிபதியின் உரையில் இடம் பெறும்.

    அந்த வகையில், வருகிற 29-ந் தேதி நாடாளுமன்றத்தில் உரையாற்ற வரும்படி ஜனாதிபதி டிரம்புக்கு பிரதிநிதிகள் சபையின் தலைவர் நான்சி பெலோசி அழைப்பு விடுத்தார். ஆனால் அவர் அடுத்த நாளே தனது அழைப்பை திரும்பப்பெற்றார்.

    மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் பிரச்சினையால் அமெரிக்காவின் பல்வேறு அரசுத்துறைகள் 4 வாரங்களுக்கும் மேலாக முடங்கி இருப்பதால், முதலில் அதற்கு தீர்வுகாண வேண்டும் என்றும், பின்னர் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

    இந்த நிலையில் அதனை ஏற்றுக்கொள்ளும் விதமாக, அரசுத்துறைகள் முடக்கம் முடிவுக்கு வரும் வரை நாடாளுமன்றத்தில் உரையாற்ற மாட்டேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது:-

    அரசுத்துறைகள் முடக்கம் நீடிக்கும் வேளையில், நாடாளுமன்றத்தில் உரையாற்ற நான்சி பெலோசி என்னை அழைத்தார். நான் அதனை ஏற்றுக்கொண்டேன். ஆனால் பின்னர் அவர் முடிவை மாற்றிக்கொண்டார். நாடாளுமன்ற உரைக்கு தாமதமான ஒரு தேதியை அவர் பரிந்துரைக்கிறார். அரசுத்துறைகள் முடக்கம் எப்போது முடிவுக்கு வருகிறதோ, அப்போதுதான் நான் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×