search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீர்வு காணப்படும் -  கவர்னர் தமிழிசை பதில்
    X

    கோப்பு படம்

    புதுவையில் போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீர்வு காணப்படும் - கவர்னர் தமிழிசை பதில்

    • நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு சார்பில் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • புதுவையில் கவர்னர் தமிழிசை 75 அரசு பள்ளிகளுக்கு நேரடியாக செல்ல உள்ளார்.

    புதுச்சேரி:

    நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு சார்பில் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    புதுவையில் கவர்னர் தமிழிசை 75 அரசு பள்ளிகளுக்கு நேரடியாக செல்ல உள்ளார். இதனை தொடங்கினார். இன்று நீடராஜப்பர் வீதியில் உள்ள சவரிராயலு நாயக்கர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்றார். அவரை மாணவிகள் வரவேற்றனர்.

    பின்னர் அங்கு நடந்த விழாவில் கவர்னர் தமிழிசை பங்கேற்றார். அங்கு பொம்மலாட்ட நிகழ்ச்சி நடந்தது. அதில் விரைவு உணவை தவிர்ப் பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    தொடர்ந்து பள்ளி ஆசிரியர் பொம்மைகள் மூலம் கவர்னரிடம் கேள்வி கேட்கும் நிகழ்ச்சியை நடத்தினார். அதில் தம்பதிகள் கவர்னரிடம் கேள்வி கேட்பதுபோல நிகழ்ச்சி அமைந்தது.

    இதில் புதுவையில் உங்களுக்கு பிடித்த இடம் எது? என கேள்வி கேட்டனர். அதற்கு கவர்னர், பாரதியார் நினைவு இல்லம்தான் எனக்கு பிடித்த இடம் என்று தெரிவித்தார். மேலும் மாணவர்கள் நன்றாக படிக்கவும், விளையாடவும், சாப்பிடவும் வேண்டும். மாணவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றார். உ ங்களுக்கு டாக்டராக இருப்பது விருப்பமா? கவர்னராக இருப்பது விருப்பமா? என்ற கேள்விக்கு பதிலளித்த கவர்னர், டாக்டர் கவர்னர் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

    கவர்னராகவோ டாக்டராகவோ வர நம் வேலைகளை, கடமைகளை நிறைவாக செய்ய வேண்டும். அப்போது நீங்கள் விரும்புவது கிடைத்து விடும் என்றார். கொரோனாவை தடுப்பது எப்படி? என கேட்டபோது அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். கிருமிகள் வாய், மூக்கு வழியாகத்தான் நுரையீரலுக்கு செல்கிறது. எனவே வாய், முகத்தை அடைத்துவிட்டால் கிருமி ஏமாந்துபோகும். கைகளை சுத்தமாக வைக்க வேண்டும். வீட்டுக்கு சென்று அம்மா, அப்பா, தாத்தா, பாட்டியிடம் தடுப்பூசி போட்டாச்சா? என கேளுங்கள். போடாவிட்டால் தடுப்பூசி போட சொல்லுங்கள் என்றார்.

    இறுதியில் ஒரு மாணவி, நான் சைக்கிளில் பள்ளிக்கு வருகிறேன். மிகவும் போக்குவரத்து நெரிசலாக உள்ளதே? என கேட்டார். அதற்கு பதிலளித்த கவர்னர், போக்குவரத்து நெரிசலை சீரமைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சைக்கிளில் வரும்போது பாதுகாப்பாகவும், சாலையின் ஓரமாகவும் வர வேண்டும். விரைவில் நெரிசல் சீர் செய்யப்படும் என்று பதிலளித்தார்.

    Next Story
    ×