search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Requisition"

    • ஊராட்சி செயலாளர் நடந்துகொண்ட விதம் கிராம வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டை போடுவதாகவும், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது.
    • சர்வாதிகார போக்குடன் நடந்துகொள்ளும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாய வேண்டும்

    கிராமங்கள் தன்னிறைவு பெற்றதால் நாடு வளர்ச்சி அடையும் என்பது தேசப்பிதா மகாத்மா காந்தியின் கூற்று. அதன்படி கிராமங்களின் வளர்ச்சியை முன்னெடுத்து செல்வதில் அரசு மிகுந்த கவனம் காட்டி வருகிறது. கிராம மக்களின் குரல் எப்போதும், எந்த சூழலிலும் தடையில்லாமல் ஒலிக்க வேண்டும். அதற்காகத்தான் கிராம சபை கூட்டங்களை தமிழக அரசு தடையின்றி நடத்துகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் தெரிவித்தார்.

    ஒரு மாநிலத்தின் வளர்ச்சி சமுதாயத்தின் வளர்ச்சியாகவும் இருக்க வேண்டும். அதனை செயல்படுத்த வேண்டுமென்றால் கிராமங்கள் முழுமையான வளர்ச்சியை பெற வேண்டும். இதனை மனதில் வைத்துத்தான் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம் என்றும் தெரிவித்து இருந்தார்.

    ஆனால் இதற்கெல்லாம் கரும்புள்ளி வைக்கும் விதமாக நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடந்த கிராம சபை கூட்டத்தில் விவசாயி ஒருவர், ஊராட்சி செயலாளரால் எட்டி உதைக்கும் அவலம் அரங்கேறியுள்ளது. அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஊராட்சி செயலாளர் நடந்துகொண்ட விதம் கிராம வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டை போடுவதாகவும், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது.

    இதுபோன்ற சர்வாதிகார போக்குடன் நடந்துகொள்ளும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாய வேண்டும் என்றும், அந்த வகையில் சட்டமன்ற உறுப்பினர், வட்டார வளர்ச்சி அதிகாரி, பொதுமக்கள் முன்னிலையில் குறைகளை சபைக்கு எடுத்துவைத்த விவசாயியை காலால் எட்டி உதைத்த ஊராட்சி செயலரை கைது செய்வதோடு மட்டுமின்றி, டிஸ்மிஸ் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பு. இந்த கோரிக்கை வலுத்தும் வருகிறது.

    • அரசு பஸ்களில் டிக்கட் பரிசோதகர்கள் பற்றாக்குறையாகினர்.
    • அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம், காரைக்குடி மண்டலத்தில் 11 கிளைகள் மூலமாக 220 டவுன் பஸ் களையும், 500-க்கும் மேற்பட்ட புறநகர் பஸ்களையும் இயக்குகிறது. இதில் 3 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட டிரை வர்கள், கண்டக்டர்கள் பணியாற்றுகின்றனர்.

    தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலை யில் அரசு பஸ்சில் பரிசோ தகர் பற்றாக்குறை தொடர்ந்து இருந்து வரு கிறது. இதை சாதகமாக்கும் நேரம் கண்காணிப்பாளர் சிலர் தனியார் பஸ்களுக்கு தாரை வார்த்து கொடுப்ப தால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

    அரசு பஸ்கள் நிர்ணயிக் கப்பட்ட வழித்தடத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு இயக்கப்படுகிறதா, பயணி களை ஏற்றி இறக்குகிறார் களா, பஸ்களில் ஏற்றப்படும் சரக்குகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்று டிக்கட் பரிசோதகர்கள் ஆய்வு செய்வார்கள். தற் போது நிலவும் பற்றாகுறை யால் பஸ்களில் முறையான ஆய்வுகள் நடப்பதில்லை. சரக்குகள் மூலமாக கிடைக்க வேண்டிய முறையான வருவாயும் கிடைப்பதில்லை.

    இது குறித்து அரசு டிக்கெட் பரிசோதகர் ஒருவர் கூறியதாவது:-

    காரைக்குடி மண்டலத் தில் 72 டிக்கெட் பரிசோத கர்கள் பணியில் இருக்க வேண்டும். தற்போது 38 பேர் மட்டுமே பணியில் இருப்பதால் பஸ்களை கண்காணிக்க முடிவ தில்லை.

    காரைக்குடி மண்டலத்தில். இதில் மேலும் சிலர் ஓய்வு பெற உள்ளனர். இதனால் காலி பணியிடம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. போதிய பரிசோதகர்கள் இல்லாததால் பஸ்களில் ஓசிப்பயணம் அதிகரித் துள்ளது. நாள் ஒன்றுக்கு ஒரு டிக்கெட் பரிசோதகர்கள் 20 பஸ்கள் வரை கண் காணிக்க வேண்டும் என்பதால் பெயரளவிலேயே பரிசோதனை நடைபெறுகின்றன என்று அவர் கூறினார்.

    ராமநாதபுரம் பகுதியில் இயக்கப்படும் தனியார் பஸ்கள் குறிப்பிட்ட நேரத் திற்கு புறப்படுவது கிடை யாது. நேரம் கண்காணிப் பாளர் ஆசியுடன் பஸ் இருக்கைகள் நிரம்பும் வரை காத்திருந்து புறப்படுகிறது. இதனால் அரசு பஸ்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க காரைக்குடி மண்டலத்தில் டிக்கட் பரிசோதகர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு பஸ்களில் போதிய கண்காணிப்பு இல்லாததால் போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன என் பது மறுக்க முடியாத உண்மை.

    காரைக்குடி மண்டல அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×