search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rathnakumar"

    • இயக்குனர் ரத்னகுமார் பல படங்களை இயக்கியுள்ளார்.
    • இவர் லியோ திரைப்படத்தில் இணை எழுத்தாளராக இருந்தார்.

    கடந்த 2017-ஆம் ஆண்டு வைபவ்- பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான 'மேயாத மான்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரத்னகுமார். இதைத்தொடர்ந்து அமலாபால் நடிப்பில் இவர் இயக்கிய ஆடை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.


    ரத்னகுமார் படம் இயக்குவதோடு மட்டுமல்லாமல் எழுத்தாளராகவும் உள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்திற்கு இணை எழுத்தாளராக இருந்தார். மேலும், சமீபத்தில் வெளியான லியோ திரைப்படத்திற்கும் இணை எழுத்தாளராக இருந்துள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. இந்த படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது.

    இந்நிலையில் சமூக வலைதளத்தில் இருந்து விலகுவதாக ரத்னகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எழுதுவதற்காக ஆஃப் லைன் செல்கிறேன். என் அடுத்த பட அறிவிப்பு வரை சமூக வலைதளத்தில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.


    • இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘குலுகுலு’.
    • இப்படத்தின் தெலுங்கு பதிப்பில் குறிப்பிட்ட காட்சியை எந்த வித விளக்கமும் இல்லாமல் சென்சார் போர்டு நீக்கியுள்ளது.

    'மேயாதமான்', 'ஆடை' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார் இயக்கியிருந்த திரைப்படம் 'குலுகுலு'. இந்த படத்தில் கதாநாயகனாக சந்தானம் நடித்திருந்தார். மேலும் அதுல்யா சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    குலுகுலு

    விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இப்படம் கடந்த ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், 'குலுகுலு' படத்தின் தெலுங்கு பதிப்பில் இந்திய பிரதமர் என குறிப்பிடும் காட்சியை எந்த வித விளக்கமும் இல்லாமல் சென்சார் போர்டு நீக்கியுள்ளது.


    குலுகுலு

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குனர் ரத்னகுமார் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "திரைப்பட சென்சாரில் தன்னிச்சையாக காட்சிகளை நீக்குவது நியாயமற்ற விஷயம். 'குலுகுலு' படத்திற்கு இது நடந்தது என்பதால் மட்டும் நான் இதை கூறவில்லை. ஜனநாயகத்தில் கலை மிக முக்கியமான தூண். அதன் மீது நீங்கள் மிகவும் கடுமையாக நடந்து கொள்கிறீர்கள். தமிழ்நாட்டை, தமிழகம் என மாற்றுவதற்கு பதில் இந்தியாவை 'united states of india' என பெயர் மாற்றம் செய்து விடுங்கள்" என ஆதங்கமாக பதிவிட்டுள்ளார்.


    • இயக்குனர் வம்சி இயக்கி வரும் வாரிசு படத்தில் விஜய் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ்-தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் 'வாரிசு' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    ரத்னகுமார் - லோகேஷ் கனகராஜ்

    ரத்னகுமார் - லோகேஷ் கனகராஜ்

    விஜய்யின் அடுத்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியானது. 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பின் போது லோகேஷ் கனகராஜ் ஒரு வரிக்கதையை விஜய்யிடம் கூறியதாகவும், தற்போது அதை முழுக்கதையாக உருவாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ரத்னகுமார் - லோகேஷ் கனகராஜ்

    ரத்னகுமார் - லோகேஷ் கனகராஜ்

    இந்நிலையில் 'மாஸ்டர்', 'விக்ரம்' ஆகிய படங்களில் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் திரைக்கதை எழுத்தாளராக இணைந்து பணியாற்றிய இயக்குனர் ரத்ன குமார் 'தளபதி 67' படத்திலும் திரைக்கதை எழுத்தாளராகப் பணியாற்ற உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

    ரத்னகுமார் - லோகேஷ் கனகராஜ்

    ரத்னகுமார் - லோகேஷ் கனகராஜ்

    இயக்குனர் ரத்னகுமார் 'மேயாத மான்', 'ஆடை' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×